முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கபினி அணையிலிருந்து 50,000 கனஅடி நீர் திறப்பு

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : கர்நாடக மாநிலத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததால் அம்மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பின. இதனால் அம்மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணை முழு கொள்ளளவை  எட்டியது. அதையடுத்து அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் டெல்டா மாவட்ட பாசனங்களுக்கு பெரிதும் உதவியது. இதனால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தணிந்ததால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து சரிந்தது. இதனால் காவிரியில் திறக்கப்படும் உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் காலை நொடிக்கு 20,495 கனஅடியில் இருந்து 14,661 கனஅடியாக குறைந்தது. அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவும் நொடிக்கு 18,400 கனஅடியாகக் குறைக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 119.98 அடியாகவும், நீர் இருப்பு 93.43 டி.எம்.சி.யாகவும் இருந்தது. ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல்களை இயக்கவும் 25-வது நாளாக தடை நீடித்தது.

இந்த நிலையில் கர்நாடகாவின் கபினி அணையிலிருந்து வினாடிக்கு 50,000 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. கபினி அணையின் நீர்மட்டம் 83.1 அடியை எட்டியதால் 5,000 கன அடியிலிருந்து, 50 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பட்டுள்ளது. அணைக்கு வினாடிக்கு 42 ஆயிரம் கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து