முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமருக்கு உணர்த்துவதற்காக ஹிட்லர் வேடம் அணிந்து பார்லி.க்கு வந்த தெலுங்குதேச எம்.பி. சிவபிரசாத்

வியாழக்கிழமை, 9 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : சர்வாதிகாரி போல் பிரதமர் மோடி செயல்படுகிறார் என்பதை உணர்த்துவதற்காக, ஹிட்லர் போல் உடை, வேடம் அணிந்து தெலுங்குதேசம் எம்.பி. நரமள்ளி சிவபிரசாத் நேற்று பாராளுமன்றத்துக்கு வந்தார்.

ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்காமல் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு ஏமாற்றிய நிலையில் தெலுங்குதேசம் கட்சி பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகியது. இந்த நிலையில், தெலுங்குதேசம் கட்சியின் எம்.பி. நரமள்ளி சிவபிரசாத், கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து ஒவ்வொரு நாளும் விதவிதமாக வேடம் அணிந்து, ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி வலியுறுத்தி வருகிறார். நேற்று ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் வேடம் அணிந்து வந்து பாராளுமன்றம் வந்தார்.

பிரதமர் மோடி சர்வாதிகாரி ஹிட்லர் போல் நடந்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் அவர் வேடம் அணிந்து வந்ததாக் கூறப்பட்டது.

நம்முடைய ஜனநாயகத்தில் மக்களின் ஆசைகளையும், எதிர்பார்ப்புகளையும் ஆட்சியாளர்கள் அறிந்து கொள்வது அவசியம். என்னுடைய கருத்துக்களை இப்படி பல்வேறு வேடங்களை அணிந்து தெரிவிக்கிறேன் என்று சிவபிரசாத் தெரிவித்தார்.

திரைப்படங்கள், நாடகங்களில் நடந்த அனுபவரான சிவபிரசாத் மத்திய அரசை ஈர்க்கும் வகையில், பெண்வேடம், ஆஞ்சநேயர், மாடு மேய்ப்பவன், பாஞ்சாலி, முஸ்லிம் வேடம், ஸ்வச்பாரத் சேவகர் என பல்வேறு வேடங்களில் வந்து ஆந்திரமாநில கோரிக்கையை வலியுறுத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து