முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுதந்திர தின விழாவை சீர்குலைக்க சதி: நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு

வெள்ளிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

Source: provided

சென்னை : சுதந்திர தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விரிவான ஏற்பாடுகள்

நாடு முழுவதும் வரும் 15-ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்து உரையாற்ற உள்ளார். இதேபோல் அந்தந்த மாநில தலைநகரங்களில் சுதந்திர தின விழாக்கள் கோலாகலமாக நடைபெற உள்ளன. இதையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உளவுத்துறை எச்சரிக்கை

இந்நிலையில், சுதந்திர தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் சுதந்திர தின விழா நடைபெறும் இடங்களில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் நள்ளிரவு 12 மணி முதல் 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்படுள்ளது. பார்வையாளர்கள் வருகைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் வரும் 22-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின ஒத்திகை

இதற்கிடையே சென்னை ராஜாஜி சாலையில் நேற்று சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதேபோல் இன்று மற்றும் நாளையும் ஒத்திகை நடைபெற உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து