முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில்வே போலீசில் பெண்களுக்கு 50 சதம் இட ஒதுக்கீடு: பியூஸ் கோயல்

ஞாயிற்றுக்கிழமை, 12 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

பாட்னா : • ரயில்வே போலீசில் விரைவில் அறிவிக்கப்பட உள்ள 10 ஆயிரம் காலிப்பணியிடங்களில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இதன் மூலம் ரயில்வேயில், பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும். தற்போது ரயில்வேக்கு 13 ஆயிரம் பேரை தேர்வு செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன. கம்ப்யூட்டர் முறையில் நடக்கும் இந்த தேர்விற்கு நேர்முக தேர்வு நடத்தப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து