முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் ஆயுத கிடங்கில் வெடி விபத்து: 39 பேர் பலி

திங்கட்கிழமை, 13 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

டமாஸ்கஸ் : சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் ஆயுதக் கிடங்கில் எற்பட்ட வெடி விபத்தில் 39 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

சிரியாவில் இட்லிப் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் வடமேற்கு பகுதியிலுள்ள சர்மதா நகரில் ஆயுதக் கிடங்கில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 39 பேர் பலியாகினர். 12 பேர் குழந்தைகள். பலர் காயமடைந்தனர். பலர் மாயமாகியுள்ளனர் என்று அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
சிரியாவின் இட்லிப் மாகாணத்தின் சில பகுதிகள் இன்னும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே இப்பகுதிகள் சிரியாவின் அரசுப்படைகள் கைபற்றுவதற்கு அடுத்த இலக்காக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெறுகிறது. அதிபர் ஆசாத்துக்கு உதவியாக ரஷ்யப் படைகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், ரசாயன ஆயுதங்களை அழிப்பதற்காக, அமெரிக்காவும், அந்நாட்டில் உள்ள ரசாயன ஆலைகள், ஐ.எஸ். தீவிரவாத முகாம்கள் மீதும் அவ்வப் போது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். இதில் ஏராளமான அப்பாவி மக்கள் பலியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து