எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தி.மு.க. தலைவர் கருணாநிதி இறந்து ஒரு வாரம் கூட பூர்த்தியாகாத நிலையில், அவரது மகன் மு.க.அழகிரி அளித்துள்ள பேட்டி மூலம் அவரது குடும்பச் சண்டை மீண்டும் அம்பலத்துக்கு வந்துள்ளது. தி.மு.க. விசுவாசிகள் தன்பக்கம்தான் உள்ளனர் என்று கூறியுள்ள மு.க. அழகிரி தி.மு.க.வில் பணத்தை வாங்கிக் கொண்டு பதவி தருகிறார்கள் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
என் பக்கம்தான்...
தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி காலமானார். அவரது உடல் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் மு.க. அழகிரி நேற்று தனது குடும்பத்துடன், கருணாநிதியின் நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.
அழகிரி கூறுகையில்,
எனது தந்தையிடம் எனக்குள்ள ஆதங்கத்தை வேண்டிக் கொண்டேன். அது என்ன ஆதங்கம் என்பது தற்போது உங்களுக்குத் தெரியாது. கருணாநிதியின் உண்மையான விசுவாசமுள்ள அனைத்து தி.மு.க. தொண்டர்களும் என் பக்கம்தான் உள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து விசுவாசிகளும் என்னையே ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே இதற்கு காலம் பின்னால் பதில் சொல்லும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
கட்சியில் இல்லை...
அப்போது, ஆதங்கம் சொந்த விஷயமா? கட்சி தொடர்பானதா? என்று செய்தியாளர்கள் கேட்ட போது, கட்சி தொடர்பானதுதான் என்று அழகிரி பதில் அளித்தார். இன்று நடைபெறும் தி.மு.க. செயற்குழுக் கூட்டம் தொடர்பான கேள்விக்கு, நான் தற்போது கட்சியில் இல்லை. எனவே, தி.மு.க. செயற்குழு குறித்து எதுவும் கூற முடியாது என்று தெரிவித்தார் அழகிரி.
மீண்டும் குழப்பம்...
கட்சி மற்றும் குடும்பப் பிரச்சினைகளால் 2014 மார்ச் மாதம் 25-ம் தேதி தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார் மு.க. அழகிரி. இந்த நிலையில், கருணாநிதி மறைவால், தி.மு.க.வில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டிருப்பதாகவே அழகிரியின் பேட்டி சிந்திக்க வைக்கிறது.
இதற்கிடையே, மு.க. அழகிரிக்கு தி.மு.க.வில் மீண்டும் பழைய பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தி.மு.க. வின் முக்கிய தலைவரும், கருணாநிதிக்கு இணையாக இருந்தவருமான ஒருவர், அழகிரியை கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்தது ஒதுக்கி வைத்ததாகவே இருக்கட்டும், மீண்டும் கட்சிப் பதவி கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அழகிரியின் ஆதரவாளர்கள் பலரும், அவருக்கு கட்சிப் பதவி அளித்தால்தான் கட்சிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று வலியுறுத்துவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கும் மு.க.அழகிரி பேட்டியளித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:-
கேள்வி: உங்கள் ஆதங்கத்திற்கு என்ன காரணம்?
பதில்: பல ஆதங்கங்கள் இருக்கு. அதையெல்லாம் ஆறு மாதத்தில் என் தொண்டர்கள் நிறைவேற்றுவார்கள்.
கேள்வி: நீங்கள் மறுபடியும் தி.மு.க.வில் இணைந்து செயல்படவேண்டும் என்று விரும்புகிறீர்களா?
பதில்: அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை.
கேள்வி: நீங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளீர்களா?
பதில்: நான் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஆலந்தூர் பாரதி கூறியுள்ளார் அல்லவா? தி.மு.க.வில் செய்தித் தொடர்பாளர்கள் யாரும் டி.வி. சேனலில் பேட்டி அளிக்கக் கூடாது என்று படித்தேன். அப்புறம் அதற்கு என்ன அர்த்தம். பிறகு எப்படி என்னைக் கட்சியில் இழுப்பார்கள்?
கேள்வி: தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்துள்ள நிலையில் இதுபோன்ற நிலையை அவர்கள் எடுப்பது சரியா?
பதில்: அவர்களைக் கேளுங்கள். ஏற்கெனவே கூறியுள்ளேன். 6 மாதத்தில் தேர்தல் வருகிறது. இப்போதே பலரும் ரஜினியிடம் பேசிக் கொண்டிருக்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தோற்றால் கட்சி சின்னாபின்னமாகி விடும்.
கேள்வி: பேச்சுவார்த்தைக்கு வந்தால் பேசத் தயாரா?
பதில்: அதெல்லாம் அந்த நேரத்தில் தான் முடிவெடுக்க முடியும். அந்த நேரம் வரும் போது பார்த்துக் கொள்ளலாம்.
கேள்வி: உங்கள் அடுத்த கட்ட திட்டம் என்ன? ஆதரவாளர்களை அழைத்து கூட்டம் போட்டுப் பேசுவீர்களா?
பதில்: கண்டிப்பாக என் ஆதரவாளர்களிடம் எப்போதும் நான் பேசுவேன். தற்போது ஒன்றும் ஆக்டிவா இருக்க மாட்டோம். நேரம் வரும் போது காலம் பதில் சொல்லும் என்று சொன்னேன் அல்லவா? காலம் பதில் சொல்லும்.
கேள்வி: கட்சியில் உங்களை இணைக்க மாட்டேன் என்று கூறுவதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
பதில்: எனக்கென்ன தெரியும். எனக்குப் புகழ் இருக்கிறது. கட்சித் தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்று அனைவரும் சொல்கிறார்கள். அதனால் அவர்களுக்கு பயம் இருக்கிறது. நான் வந்தால் தலைவராகி விடுவேன் என்ற எண்ணமாக இருக்கலாம்.
கேள்வி: குடும்ப உறுப்பினர்களிடம் அல்லது மற்றவர்களிடம் பேசி சரி செய்யலாமே?
பதில்: குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் இதில் அக்கறை இல்லை. யாரும் நான் கட்சியில் வருவது பற்றி பேசியதில்லை.
கேள்வி: இப்போது இருக்கும் சூழ்நிலையில் தி.மு.க. சரியாக செயல்படுகிறது என்று நினைக்கிறீர்களா?
பதில்: சரியாகச் செயல்பட்டால் எப்படி டெபாசிட் போகும். என்ன கேள்வி இது?
கேள்வி: ஆர்.கே.நகர் தேர்தல் தோல்வி, கட்சிக்கு மேலும் சில பின்னடைவு என்பது உங்கள் ஆதங்கமா?
பதில்: ஆமாம். வரிசையாகத் தோற்கிறார்கள், கட்சிக்காரன் தலைவருக்காக எவ்வளவு உழைத்திருப்பான், அண்ணா காலத்திலிருந்து உழைத்து வருகிறான். இதைக்கேட்டு எப்படி எடுத்துக் கொள்வான் சொல்லுங்கள்? இதெல்லாம்தான் என் ஆதங்கம். அதுவுமில்லாமல் காசு வாங்கிக் கொண்டு பதவி கொடுக்கிறார்கள். முன்பெல்லாம் ஒரு செயலாளர் இருந்தால் ஒரு துணைச் செயலாளர் இருப்பார். இப்போது பத்து பதினைந்து பேர் இருக்கிறார்கள். இவ்வாறு அழகிரி பேட்டி அளித்துள்ளார்.
அழகிரியின் இந்த பகிரங்க பேட்டிகள் மூலம் அவரது குடும்பச் சண்டை மீண்டும் அம்பலத்துக்கு வந்துள்ளது. இந்த சூழ்நிலையில்தான் இன்று தி.மு.க. செயற்குழு கூடுவது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.