முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிர்மலா தேவியின் காவல் மேலும் நீட்டிப்பு

செவ்வாய்க்கிழமை, 14 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : நிர்மலா தேவியின் காவலை மேலும் நீட்டிப்பு செய்து விருதுநகர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அருப்புக்கோட்டை அரசு உதவி பெறும் தனியார் கலைக் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் சிலரை தவறான பாதைக்கு அழைத்ததாக அக்கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலாதேவி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்து வந்தனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் மதுரை காமராஜர் பல்கலை கழக உதவி பேராசிரியர் முருகன், முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், நிர்மலாதேவியை விருதுநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் 2 -இல் நேற்று போலீஸார் ஆஜர்படுத்தினர். விசாரணையின் அடிப்படையில் நிர்மலாதேவியை ஆகஸ்ம் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதேபோல் உதவி பேராசிரியர் முருகன், முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரின் நீதிமன்ற காவலும் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து