முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது 17-ம் தேதி விசாரணை

செவ்வாய்க்கிழமை, 14 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையில் நிர்வாக ரீதியான பணிகளை மேற்கொள்ள அனுமதித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் வரும் 17-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.

9-ம் தேதி அனுமதி

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல், உடல்நல பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல் வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடத் தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப் பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தனது நிர்வாகப் பணியை மேற்கொள்ளலாம் என பசுமைத் தீர்ப்பாயம் கடந்த 9-ம் தேதி அனுமதி அளித்தது.

மேல்முறையீடு...

தேசிய பசுமை தீர்ப் பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரிக்க சம்மதம் தெரிவித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு வரும் 17-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து