முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: சென்னை வானிலை மையம்

புதன்கிழமை, 15 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை வானிலை மையம் இயக்குநர் பாலசந்திரன்,

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுநிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது தற்போது புவனேஸ்வர் அருகே தென்கிழக்கே சுமார் 30 கி.மீ., தூரத்தில் நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தின் இதர பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதான மழை பெய்யயலாம். அதேசமயம், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தரை இடைவெளி விட்டு மழை பெய்யக்கூடும்.

எனவே, வடக்கு ஆந்திரா, வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். அதிகபட்சமாக, செங்கோட்டையில் 27 செ.மீ., சின்னக்கல்லாரில் 21 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் சென்னை மாநகரத்தில் கடந்த 6 மணி நேரத்தில் 35 மி.மீ. மழை கொட்டித் தீர்த்ததாக மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சாதாரணமாக பெய்ய தொடங்கிய மழை போகப் போக கனமழையாக மாறியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து