முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள மாநிலத்தில் கனமழை, நிலச்சரிவிற்கு பலியானோர் எண்ணிக்கை இதுவரை 324-ஆக உயர்வு

வெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

கொச்சி, கேரளாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலசரிவிற்கு பலியானோர் எண்ணிக்கை இதுவரை 324 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்து தரப்பிலிருந்தும் உதவிகளை எதிர்நோக்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு தென்மேற்கு பருவ மழை கொட்டி தீர்த்து வருகிறது.

இடைவிடாது பெய்த பேய்மழையால் கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளா நிலைகுலைந்தது. மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன.

இதுவரை மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 324 பேர் பலியாகி இருப்பதாக அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகள், உடைமைகளை இழந்துள்ளனர்.

அவர்கள்  1,500 அரசு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 14-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ள நீரில் பாதிக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தில் உள்ள 39 அணைகளில் 35 அணைகள் நிரம்பித் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாநிலத்தின் பெரும்பகுதி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினருடன் இணைந்து முப்படையினரும் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், மீட்பு பணிக்காக கூடுதலாக இந்திய கடற்படைக்கு சொந்தமான 4 கப்பல்கள் கொச்சி வந்துள்ளது.

இந்த மீட்புக்குழுவில் இந்த கப்பலில் வந்த கடற்படையினரும் இணைய உள்ளனர். நிவாரணப்பொருட்களும் கப்பல் மூலமாக கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்கிடையே கேரளாவில் கடந்த நூறு ஆண்டுகளுக்கு பிறகு பெய்த கனமழையால் ஏற்பட்ட மழை வெள்ளம் மற்றும் நிலசரிவிற்கு இதுவரை 324 பேர் பலியாகியிருப்பதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் மாநிலம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் அனைத்து தரப்பிலிருந்தும் உதவிகளை எதிர்நோக்கி காத்திருப்பதாக உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து