எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாட்டிங்காம்,இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இதற்காக இந்திய அணியில் மாற்றங்கள் செய்யப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. 2 வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இதிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது. மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்குகிறது.
முதல் இரு டெஸ்டில் தோல்வி அடைந்ததால் இந்திய அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. ’இரண்டாவது டெஸ்ட் தோல்விக் கு வீரர்கள் தேர்வில் செய்த தவறுதான் காரணம்’ என்று இந்திய கேப்டன் விராத் கோலி வெளிப்படையாகக் கூறியிருந்தார்.
சுழல் பந்துவீச்சுக்கு சாதகமில்லாத மைதானத்தில், இரண்டாவது சுழல் பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ்வை சேர்த்திருக்கக் கூடாது என்று பலரும் விமர்சனம் செய்திருந்தனர். அதன்படியே அவரும் அந்தப் போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இதையடுத்து இன்றைய போட்டியில் அவருக்குப் பதிலாக வேகப்பந்துவீச்சாளர் சேர்க்கப்பட இருக்கிறார். பும்ரா உடல்நிலை தேறி விட்டதால் அவர் களமிறங்குகிறார். அவருடன் இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் வேகப்பந்துவீச்சை கவனித்துக்கொள்வார்கள். சுழலுக்கு அஸ்வின் இருக்கிறார். பேட்டிங்கிலும் அவர் நிதானம் காட்டுவதால் இந்திய அணி அவரை பெரிதும் நம்புகிறது.
இந்திய மண்ணில் கலக்கும் தொடக்க ஆட்டக்காரர்கள் வெளிநாட்டு மண்ணில் தொடர்ந்து சொதப்பி வருகிறார்கள். தென்னாப்பிரிக்க தொடரிலும் இதே நிலைதான் நடந்தது. முரளி விஜய், முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் நிலைத்து நிற்கவில்லை.
முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 20 ரன்னும் இரண்டாவது இன்னிங்ஸில் 6 ரன்னும் எடுத்திருந்தார். இரண்டாவது டெஸ்ட்டில், இரண்டு இன்னிங்ஸிலும் டக்-அவுட் ஆகி ஏமாற்றினார். ஒரே டெஸ்டில், இரண்டு இன்னிங்சிலும் இந்திய ஓபனிங் பேட்ஸ்மேன் ஒருவர் டக்-அவுட் ஆவது இது 6-வது முறை!
கே.எல்.ராகுலுக்கும் இதே சிக்கல். தவறான ஷாட்களை ஆடி விக்கெட்டை பறிகொடுத்து விடுகிறார். இதனால் இன்றைய போட்டியில் கடந்த போட்டியில் உட்கார வைக்கப்பட்ட ஷிகர் தவான் அணிக்கு திரும்புவார் எனக் கூறப்படுகிறது.
விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், இரண்டாவது டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸில் ஒரு ரன்னும் இரண்டாவது இன்னிங்ஸில் டக் அவுட்டும் ஆனார்.
முதல் போட்டியில், முதல் இன்னிங்ஸில் டக் அவுட். இரண்டாவது இன்னிங்ஸில் 20 ரன்கள் எடுத்தார். கீப்பிங்கிலும் நிறைய தடுமாற்றம். இதனால் இன்று தொடங்கும் போட்டியில் அவர் களமிறங்குவது டவுட். அவருக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பண்ட் களமிங்குவார் எனக் கூறப்படுகிறது.
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் இந்திய ஏ அணி சார்பில் இடம்பெற்ற ரிஷப் அதில் சிறப்பாக ஆடியதை சில முன்னாள் வீரர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். அவரை டெஸ்ட்டில் அறிமுகப்படுத்த பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர் சேர்க்கப்படுவது குறித்து,
‘இன்று 11 மணிக்கு மேல்தான் தெரியும்’ என்று கூறியுள்ளார் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. நேற்று முன்தினம் நடந்த பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டார் ரிஷப். அவர் கண்டிப்பாக அணியில் சேர்க்கப்படுவார் என்கிறார்கள். புஜாரா, ரஹானே ஆகியோரும் கடும் பயிற்சியில் ஈடுபட்டனர்.
முதுகுவலி காரணமாக அவதிப்பட்டு வந்த விராத் கோலி, பயிற்சியில் வலியோடு ஈடுபட்டார். அவர் நூறு சதவிகிதம் குணமாகவில்லை. இன்று, அவர் உடல்நிலை சரியாகிவிடும் என அணியின் பிசியோதெரபிஸ்ட் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது டெஸ்ட் போட்டியை எப்படியாவது வென்று விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரம் இந்த டெஸ்ட்டையும் வென்று தொடரை கைப்பற்றும் முயற்சியில் இங்கிலாந்து வீரர்கள் தீவிரம் காட்டுவார்கள். இதனால் இந்த டெஸ்ட் இன்னும் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும்.
ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சில் பலமாக இருக்கிறது. ஆண்டர்சன், பிராட், சாம்குர்ரன் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். முதல் 2- டெஸ்டில் வெற்றி பெற்றுள்ளதால் இங்கிலாந்து அணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. 3-வது டெஸ்டிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் அந்த அணி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.