எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒரு நாட்டின் பெருமைக்கும், சிறப்புக்கும், உயர்விற்கும் காரணம் அந்நாடு மட்டுமன்று அதில் வாழும் மக்களும், அவர்தம் நாகரிகமும், பயன்பாடும், வாழ்க்கை முறையுமே ஆகும். அந்த வகையில் தமிழ்நாடு சிறந்து விளங்கத் தமிழர்களும், அவர்கள் அமைத்த கோயில்களும், அவர்களின் சமய நம்பிக்கையும், வழிபாட்டு முறைகளுமே காரணமாகும்.
தல வரலாறு
நினைத்த காரியத்தை நிறைவேற்றி பக்தர்களுக்கு நிறைந்த அருளைத்தந்து காத்து வரும் ஊட்டி அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன், ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோயில் குறித்த வரலாறு:-
உலகிலேயே தவத்தில் சிறந்த பகுதி தமிழ்நாடாகும். தமிழ்நாட்டு மக்கள் கடவுள் பக்தியில் மிகவும் சிறந்தவர்கள். இமைப்பொழுதும் நெஞ்சிலிருந்து இறைவனை நீங்காது நினைப்பவர்கள். இறை உணர்வானது தமிழக மக்கள் வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஒன்றாகும். கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழி. அந்த பழமொழிக்கிணங்க தமிழ்நாட்டு ஊர்களில் எல்லாவற்றிலும் ஆலயங்கள் நிறைந்துள்ளதை நாம் அறிவோம். அந்த வரிசையில் மலைகளின் அரசி எனத் திகழும் ஊட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோயில் மிகவும் பெருமை வாய்ந்தது. இத்திருக்கோயிலானது எல்லோரும் எளிதில் வந்து தரிசிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஊட்டி உலக சுற்றுலா ஸ்தலமாக இருப்பதால் இங்கு வரும் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்லாது வெளிமாநிலத்தவர்களும், வெளிநாட்டினரும் இக்கோயிலுக்கு வந்து வழிபாடு நடத்துவது குறிப்பிடத்தக்கது.
சக்திமலை
தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களைத் தன்னுள் அடக்கி அப்பகுதியைச் சீதவளநாடு என்றழைத்தனர். குளிர், காற்று, பெருமழை, கடும்பனி யாவும் நிறைந்த இப்பகுதியை சீதாநாடு என்பது பொருத்தமானதே. நாடென்ப நாடா வளந்தரும் நாடு என்ற வள்ளுவர் கருத்திற்கு இணங்க இச்சீதநாடு இயற்கை வளம் நிறையப் பெற்றுள்ள நாடாகும். சீதநாட்டுக்கு அழகு தருவனவாக இரண்டு மலைகள் உள்ளன. ஒன்று வெள்ளியங்கிரி மற்றொன்று நீலகிரியாகும். இவற்றுள் வெள்ளியங்கிரியை சிவன்மலை என்றும், நீலகிரியைச் சக்தி மலை என்றும் வடமொழி கந்தபுராணம் கூறுகின்றது.
மிகப்பழம் தமிழ் நூலாகிய சிலப்பதிகாரத்துள் நீலகிரி பற்றி குறிப்பு உள்ளது. சேரன் செங்குட்டுவன் வடநாட்டு மன்னர்களுடன் போர் புரிய வஞ்சி மாநகரத்திலிருந்து புறப்பட்டு பெரும்படையுடன் சென்றான். அப்போது அவர் நீலகிரி வழியாகச் சென்றான் என்பதனை நாம் சிலப்பதிகார வரிகள் மூலம் நன்கு அறிந்து கொள்ள முடியும்.
3 ஆயிரம் ஆண்டுகள்
நீலகிரி மலைக்குகைகளில் தொல்மாந்தர்களின் பழங்கால ஓவியங்கள் தொல்பொருள் துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் காலம் சுமார் 3000 ஆண்டுகள் எனப்படுகிறது. ஆகவே மூவாயிரம் ஆண்டுகளாக மாந்தரினம் நீலகிரி மலையில் வாழ்ந்து வருவது வரலாற்றால் நன்கு தெரிகிறது. நீலகிரி மலையானது காட்டுவளம், நீர்வளம், நிலவளம் மிக்கதாய்த் திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் கூறுவது போன்று கைபுனைந்தியற்றாக்களின் பெருமை வனப்பு உடையதாகத் திகழ்கிறது. நீலகிரிக்கு மணிமுடியாய்த் திகழ்வது உதகமண்டலம் (ஊட்டி) நகரமாகும். இந்நகரம் நீலகிரி மாவட்டத்தின் தலைநகரம் ஒத்தைக்கல் மந்து என்பது இதன் பழைய பெயராகும்.
மந்து என்றால் மலை என்று பொருள்படும். ஒற்றைக்கல்லில் உருவாக்கப்பட்ட மலை என்பது உதகமண்டலம் என மருவி வழங்குகிறது. ஊட்டி நகரத்தின் அமைப்பை கூர்ந்து கவனித்து பார்த்தால் ஓங்கார வடிவம் போல் அமைந்துள்ளது தோன்றும். கடந்த 1822-ம் ஆண்டு கோவை மாவட்ட கலெக்டராக இருந்த ஜான் சல்லிவன் ஸ்டோன் ஹவுஸ் என்ற பகுதியைக் கண்டறிந்து அங்கு வந்து குடியேறி ஊட்டியைத் தோற்றுவித்தார். எனவே தான் இன்றும் ஸ்டோன்ஹவுஸ் பகுதிக்கு அண்மையில் உள்ள பகுதிக்கு பழைய ஊட்டி என்றழைக்கப்படுகிறது. தொடர்ந்து இங்கு நிலவிய தட்ப வெட்பநிலையை விரும்பிய வெளிநாட்டவர்களும், நம் நாட்டவர்களும் இங்கு வந்து குடியேறியதாகத் தெரிகிறது.
மாரியம்மன் பெருமை
மக்கள் தொகை பெருக பெருக ஊட்டி நகரில் வாழ்க்கைக்கு வேண்டிய வசதிகள் பெருகின. இன்றியமையாது வேண்டப்படுகிற வசதி, வாணிகம் பெருகியது. ஊட்டி நகரின் மையப் பகுதியில் சந்தைப் பகுதியை ஓட்டிய இடத்தில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன், காளியம்மன் திருக்கோயில். சந்தைக்கடை ஓட்டி அமைந்திருப்பதால் இக்கோயிலை சந்தைக்கடை மாரியம்மன் கோயில் என்றும் பக்தர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த மாரியம்மன் கோயில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும்.
தாயை தெய்வமாக வணங்கும் பழக்கம் மிகப் பழையது நினைவிற்கு எட்டாதது. தாய்வழிச் சமுதாயம் சிறந்து விளங்கிய காலத்தில் தாயே குடும்பத்தின் தலைவியாக விளங்கினாள். அம்மா என்ற தமிழ்ச் சொல்லில் இருந்துதான் சுமேரியர்களுக்கு உமா என்றும், பாபிலோனியர்களுக்கு உம்மா என்றும், ஆர்க்கேடியர்கள் உம்மி போன்ற சொற்கள் தோன்றியுள்ளன என்று அறிஞர்கள் கருதுகின்றனர். சிந்துவெளி நாகரிகத்தில் பெண் தெய்வ வழிபாடு சிறந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. சங்க காலத்தில் இவள் செல்வி என்று அழைக்கப்பட்டாள். பெண் தெய்வம் சக்தியையும், வளத்தையும் தருவதாகக் கருதப்பட்டது. பெண் தெய்வத்தை பெருமோட்டாள் என்று அழைப்பர். பெருமோட்டாள் என்றால் எல்லோரையும் பெற்ற வயிறு என்று விளக்கம் தருகிறார், நச்சினார்க்கு இனியர் என்கிற உரைகாரர்.
ஊருக்கு ஒரு பெண் தெய்வம்
ஊருக்கு ஒரு பெண் தெய்வம் அந்த ஊரையும், ஊர் மக்களையும் காக்கும் என்ற நம்பிக்கை மிகு பழங்காலத்திலிருந்தே எழுந்தது. இத்தேவதை கோயில் வடக்கு நோக்கி கட்டப்படும். ஒவ்வொரு ஊரிலும் காக்கும் தேவதையாகவும், வளத்தின் சின்னமாகவும் பெண் தெய்வக் கோயில்கள் கட்டப்பட்டன. தமிழ்நாட்டில் இவை மாரியம்மன் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. உலகம் இயங்குவதற்கு முதற்காரணமே சக்திதான். வானவெளியாக, வெளியில் வீசும் காற்றாக, காற்றில் இயங்கும் உயிராக மற்றும் மண்ணாக, நெருப்பாக, நீராக ஆக எல்லாமுமாக இருந்து அருள்சுரக்கும் தன்மை அந்த ஆதிபராசக்திக்கு மட்டுமே இருக்கிறது. இதனையே பாவேந்தர் பாரதிதாசன்
எங்கெங்கு காணிணும் சக்தியடா,
ஏழு கடன் அவள் வண்ணமடா என்று பாடியுள்ளார். அந்த ஆதிபராசக்தி இத்திருக்கோயிலில் மாரியம்மனாக, காளியம்மனாக, காட்டேரி அம்மனாக என முப்பெரும் தேவியாக எழுந்தருளியிருப்பது சிந்தனையை தூண்டி விடும் ஒரு செய்தியாகும். சக்தி என்பது வலிமை என்ற பொருளைத்தரும் சொல்லாகும். அந்த சக்தி இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி என மூன்று வகையாக உள்ளது. இச்சை என்பது விருப்பமாகும். விருப்பங்களை அடைந்து திருப்தியாவதற்கு உரிய வகையில் வலிமை தருவது இச்சா சக்தியாகும். கிரியை என்பது வினையாகும். உயிர்கள் இந்த உலகில் முறையாக செயல்படுவதற்கு உரிய வகையில் வலிமை தந்து ஆட்கொள்பது கிரியா சக்தியாகும்.
அதேபோன்று உயிர்கள் இந்த உலகத்தில் விருப்பத்திற்கேற்றவாறு இயங்கி வாழ்ந்து ஓய்ந்த பின்னர் ஞானம் என்ற அறிவுநிலையை எய்துவதற்கு உரிய வகையில் வலிமையைத் தந்து உய்விப்பது ஞான சக்தியாகும். ஆக அம்மன் இந்த மூன்று வகையான சக்திகளையும் உயிர்கட்டு, வாரி வழங்குவதற்காகவே ஊட்டி மாரியம்மன் திருக்கோயிலில் மாரியம்மனாகவும், காளியம்மனாகவும், காட்டேரியம்மனாகவும் மூன்று வடிவங்களை தாங்கி ஆட்சி செய்கின்றாள் என்பது உண்மை.
திருக்கோயில் சன்னதிகள்
இக்கோயிலானது பக்தர்களின் வழிபாட்டுக்காக காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை அடையா நெடுங்கதவாகத் திறந்தே இருக்கும் இக்கோயிலில் நான்கு கால பூஜைகள் வேதஆகம முறைப்படி நடைபெற்று வருகிறது. இப்பூஜைகளில் பக்தர்கள் கலந்து கொண்டு இடையூரின்றி அம்மனை வணங்கி அம்பாளின் அருளைப் பெறலாம். இத்திருக்கோயிலில் அருள்மிகு மாரியம்மன், அருள்மிகு காளியம்மன் இருவரும் மூலஸ்தனத்தில் ஒன்றாக இருந்து காட்சி அளிக்கின்றனர். இங்கு காட்டேரி அம்மனுக்கு தனியாக ஒரு சந்நிதியும் உள்ளது. இந்த சந்நிதியில் குழந்தை இல்லாதவர்கள், குழந்தைப் பேறு வேண்டி தொட்டில் கட்டி வழிபாடு நடத்துவர். அத்துடன் தங்கள் நோய் தீர வேண்டிக் கொள்பவர்களும் உண்டு. தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் காட்டேரி அம்மனுக்கு கோழிக்குஞ்சும், கருப்புப் புடவையும் காணிக்கையாகக் கொடுக்கின்றனர்.
இத்திருக்கோயிலில் பிள்ளையார், ஏகாம்பரேசுவரர், காமாட்சி அம்மன், தியாராச பெருமாள், வடிவாம்பிகை, சுப்பிரமணியர், சண்டேசுரர், சப்த கன்னிமார்கள், முனீஸ்வரர், கருப்பண்ணசாமி, நவக்கிரகங்கள், துர்கை முதலிய சந்நிதிகளும் உள்ளன. மாரியம்மன், காளியம்மன் சன்னதிக்கு முன்னர் சிவச்சின்னமான நந்தியெம்பெருமாள் காட்சி தருகிறார். அம்பாளுக்குச் சிங்க வாகனம் தான் அமைக்க வேண்டும். ஆயினும் காளை வாகனம், பெரியோர்கள் அமைந்துள்ளமைக்கு காரணம் ஒன்று இருக்க வேண்டுமல்லவா?
இங்கு எழுந்தருளியுள்ள கருணாம்பிகையாகிய அன்னை சாந்த வடிவினளாகக் காட்சி அளிக்கின்றாள் என்பதால்தான் தரும வடிவமான நந்தியம் பெருமானை அங்கு அம்மையின் வாகனமாக அமைத்தனர் போலும். சிவபெருமானுக்குரிய ஊர்தியாகிய காளையை சக்திக்கும் ஏற்றதாய் அமைத்திருப்பது மிகவும் பொருத்தமுடையதேயாம். அம்பாளுக்கு மெய்காப்பாளர்களாக துவாலபாலகர்களும் வீற்றிருக்கிறார்கள். இந்த கோயிலில் நவக்கிரக நாயர்கள் தம்பதி சமேதராய் இருப்பது ஒரு சிறப்பாகும்.
திருவிழாக்கள்
இத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் மாரியம்மனுக்கு 28 நாட்கள் சிறப்பு உற்சவம், தேரோட்டம் முதலியன நடைபெறுகின்றன. அந்த நாட்களில் அம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திருவுருவத்தில் துர்க்கையாகவும், காமாட்சியாகவும், பார்வதியாகவும், மீனாட்சியாகவும், புவனேஸ்வரியாகவும், பகவதியாகவும் இன்னும் பற்பல திருக்கோலங்களில் அலங்காரம் பெற்று திருவீதி உலா எழுந்தருள் புரிவது கண்கொள்ளாக் காட்சியாகும். தேர்த்திருவிழாவானது ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் செவ்வாய் கிழமை நடைபெறும். திருத்தேரில் எழுந்தருளிப் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் அருள்மிகு மாரியம்மனுக்கு அந்நாளில் வெள்ளைச் சேலையை உடுத்தி அலங்கரிப்பர்.
ஆதிநாளில் ஊட்டியில் வாணிபம் செய்த வணிகர்களும், பொதுமக்களும் முதல் முதலில் இரண்டு பெண் தெய்வங்களை கண்டு வணங்கியதாகக் கேள்விப்படுகின்றோமே. அந்த பெண் தெய்வங்கள் தோன்றி காட்சியளித்த நாள் செவ்வாய்கிழமையாகும். அவர்கள் உடுத்தியிருந்த புடவை வெள்ளைப்படவை. எனவே தான் தேர்த்திருவிழா செவ்வாய்கிழமை நடைபெறுகிறது. அந்நாளில் அம்மனுக்கு வெள்ளைச் சேலை அலங்காரம் செய்யப்படுகிறது என்றும் கூறுகின்றனர். தேர்த்திருவிழா நாளன்று இங்கு மற்றொரு சிறப்பையும் காண முடிகிறது. தேர் வீதியில் உலாவருகின்ற போது பக்தர்கள் அம்மன் மீது உப்பு வீசுவர். உப்பு நீரில் கரைவது போல் தங்கள் துன்பங்கள் உலா வருகின்ற அம்மன் அருளில் பட்டு நீங்கிட வேண்டும் என்று பக்தர்களின் நம்பிக்கை.
இத்திருக்கோயிலில் தமிழக முதல்வரின் அன்னதான திட்டம் நாள்தோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நினைத்த காரியத்தை நிறைவேற்றி பக்தர்களுக்கு நிறைந்த அருளைத் தந்து காத்து வரும் ஊட்டி அருள்மிகு மகாமாரியம்மன், மகா காளியம்மன் திருக்கோயிலில் செயல் அலுவலராக பொன்.சி.லோகநாதன் நிர்வகித்து வருகின்றனர்.
அன்புராஜன், ஊட்டி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
இலங்கை சிறையில் இருந்து 33 தமிழக மீனவர்கள் விடுதலை
27 Mar 2024சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவ
-
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடலாம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024சென்னை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல்நலக்குறைவு: ஆம் ஆத்மி
27 Mar 2024புதுடெல்லி, 7 நாட்களாக சிறையில் உள்ள நிலையில் கெஜ்ரிவாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி தகவல் தெரிவித்துள்ளது.
-
உ.பி. மீரட்டில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி
27 Mar 2024லக்னோ, உ.பி. மீரட்டில் இருந்து தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்குகிறார்.
-
மகாராஷ்டிரா மாநிலத்தில் இடைத்தேர்தல் நிறுத்தம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024மும்பை, மராட்டிய மாநிலம் அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கடும் தோல்வியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
27 Mar 2024சென்னை, குறுக்கு வழிகளில் செயல்படும் தி.மு.க பாராளுமன்றத் தேர்தலில் கடும் தோல்வியை சந்திக்கும் என்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
27 Mar 2024சென்னை, பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை, ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.