முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசியக் கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடியே நடக்கிறது - ஒப்பந்தம் கையெழுத்து

சனிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை : ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி, திட்டமிடப்பட்ட அட்டவணைப் படியே நடக்கிறது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

13 போட்டிகளில்...

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி 1984-ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நடந்த 13 போட்டிகளில் இந்திய அணி 6 முறையும், இலங்கை 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. இந்நிலையில் 14- வது போட்டிக்கான அட்டவணையைச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கும் இந்தப் போட்டியில் முதல் போட்டி செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்குகிறது. இறுதிப்போட்டி 28-ம் தேதி நடக்கிறது. மொத்தம் 13 போட்டிகள் நடக்கின்றன.

6 அணிகள்...

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி என 6 அணிகள் இதில் பங்கேற்கிறது. தகுதிச்சுற்று ஆட்டங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஏமன், நேபாளம், மலேசியா, ஹாங்காங் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி ஏ பிரிவில் இடம் பெறும். முதல் போட்டியில் இலங்கை அணியும், பங்களாதேஷும் மோது கின்றன.

கடும் எதிர்ப்பு...

செப்டம்பர் 19-ம் தேதி இந்திய அணியை எதிர்கொள்கிறது பாகிஸ்தான். அதற்கு முந்தைய நாள் தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மோதும் இந்திய அணி, ஒரு நாள் கூட ஓய்வு இல்லாமல் அடுத்த நாளே பாகிஸ்தான் அணியுடன் விளையாட அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தான் அணிக்கு இரண்டு நாள் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த அட்டவணைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாகிஸ்தானுக்கு ரெஸ்ட் கொடுத்துவிட்டு, இந்தியாவுக்கு கொடுக்காமல் மறுநாளே விளையாட வைப்பது என்ன நியாயம்? இந்த அட்டவணை, முட்டாள்தனமாக தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த தேதியை மாற்ற வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறப்பட்டது.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் உட்பட பலர், இந்த போட்டியில் இந்தியா விளையாடக் கூடாது என்று கோரிக்கை வைத்தனர்.

ஐந்தரை மணி நேரம்...

அவர், இது தொடர்பாக கூறும்போது, “அட்டவணையை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இது சரியான அட்டவணை என்று நினைக்கவில்லை. ஒரு போட்டி விளையாடி முடித்த பிறகு ஒரு வீரர் மீண்டும் உடல் தகுதி பெற, குறைந்தபட்சம் 48 மணி நேரம் தேவைப்படுகிறது. ஏனெனில் ஒரு வீரர் மூன்றரை மணி நேரம் பீல்டிங் செய்கிறார். அதோடு ஒரு பேட்ஸ்மேன் இரண்டு மணி நேரம் விளையாடினால் மொத்தம் ஐந்தரை மணி நேரம் ஆகிறது. அதனால், உடல் தகுதி பெற 24 முதல் 48 மணி நேரம் வரை தேவைப்படும். ஆசியக் கோப்பையில் இந்தியாவின் அட்டவணையை பிசிசிஐ மாற்றி அமைக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

கையெழுத்தானது...

ஆனால் எந்த வித மாற்றமும் இல்லாமல் ஆசிய கோப்பைப் போட்டி திட்டமிடப்பட்ட அட்டவணைப்படியே நடக்கிறது. இதற்கான ஒப்பந்தந்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரிய தலைவரும் அபுதாபி அமைச்சருமான சேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யானும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரியும் கையெழுத்திட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து