முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடி அரசுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் ஒரு மாதம் போராட்டம்: ராகுல்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் ஒரு மாதம் போராட்டம் நடத்துவது என்று காங்கிரஸ் கட்சி  முடிவு செய்துள்ளது.

டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், அக்கட்சி பொது செயலாளர்கள், மாநிலத் தலைவர்கள், பொறுப்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மோடி அரசின் ஊழல், முறைகேடுகள் குறித்து மக்களிடையே எடுத்துச் சொல்வதென்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக, ரஃபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் குறித்து மக்களிடம் எடுத்து சொல்வதென்று தீர்மானிக்கப்பட்டது.

இந்த முடிவின்படி, அடுத்த 30 நாள்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள், மாவட்ட அளவிலும், மாநிலம் தழுவிய அளவிலும் போராட்டம் நடத்துவார்கள். மோடி அரசின் ஊழல்கள் குறித்து நியாயமான, சுதந்திரமான மற்றும் கூட்டுக் குழு விசாரணை நடத்தப்படுவதை காங்கிரஸ் உறுதி செய்யும்.  காங்கிரஸ் கட்சியினரை யாராலும் மிரட்டவோ அல்லது பணிய வைக்கவோ முடியாது.என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து