முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவுக்கு உதவ பாகிஸ்தான் தயார்: இம்ரான்கான் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், கனமழையால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு உதவ பாகிஸ்தான் தயாரக உள்ளது என்றும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காகப் பிரார்த்தனை செய்து கொள்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ரூ.19,512 கேடிக்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கேரள மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,

பாகிஸ்தான் மக்களின் சார்பாக கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்கிறேன். இயற்கை பேரிடர் பேரழிவில் இருந்து விரைவில் மீண்டு வர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அதில் இம்ரான்கான் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து