முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாஜ்பாய் மறைவுக்கு ஐ.நா. பொதுச் செயலர் இரங்கல்

வெள்ளிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

நியூயார்க், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு, ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஐக்கிய நாடுகளுக்கான இந்திய நிரந்தரப் பிரதிநிதி சயீது அக்பருதீன் சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது,

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்திலுள்ள ஐ.நா.வின் இந்திய அலுவலகத்துக்கு வருகை புரிந்த, ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இரங்கல் தெரிவித்ததுடன், அவருடனான இனிய நினைவுகளையும் அங்கு வைக்கப்பட்டுள்ள இரங்கல் பதிவேட்டில் குறிப்பிட்டார் என்று அக்பருதீன் அதில் பதிவிட்டுள்ளார்.

ஐ.நா. பொதுச் சபையில் முதல் முறையாக 1977-ம் ஆண்டு உரையாற்றிய வாஜ்பாய், அதற்குப் பிறகு 2003-ம் ஆண்டு வரை 7 முறை உரை நிகழ்த்தியுள்ளார். மேலும், அங்கு இந்தி மொழியில் உரையாற்றிய முதல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் அவரே என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து