முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரேசில் முன்னாள் அதிபர் தேர்தலில் போட்டியிட தடை

ஞாயிற்றுக்கிழமை, 2 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

ஜெனிரோ, பிரேசிலில் ஊழல் வழக்கில் சிறையிலுள்ள முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா அந்நாட்டு அதிபர் தேர்தலில் போட்டியிட தேர்தல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பிரேசிலில் வரும் அக்டோபர் 7-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தொழிலாளர் கட்சி சார்பில் லுலா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,லுலா தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கக் கோரி தேர்தல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த7 நீதிபதிகள் அமர்வு லுலா தேர்தலில் போட்டியிட தடை விதித்து உத்தரவிட்டது.

முன்னதாக, லுலாவின் பல்வேறு மேல் முறையீட்டு மனுக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் அவரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என ஐ.நா. மனித உரிமை ஆணையம் கூறியிருந்தது. ஆனால், இதைதேர்தல் நீதிமன்றம் நிராகரித்து விட்டது.எனினும், இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக லுலாவின் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ள போதிலும் லுலா தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெறுவார் என கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து