முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈக்வடாரில் நிலநடுக்கம் 6.3 ரிக்டராக பதிவு

வெள்ளிக்கிழமை, 7 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

குவைட்டோ, ஈக்வடார் நாட்டில்  ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.

தெற்கு அம்பாடோ நகரத்திலிருந்து சுமார் 94 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பகுதியை மையமாக கொண்டு 112 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவிசார்மையம் கூறியுள்ளது. தலைநகர் குவைட்டோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் இருக்கும் கட்டிடங்கள், வீடுகள் பலமாக குலுங்கின. இதையடுத்து வீடுகளில் இருந்து மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் பல கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், புவேர்டாஸ் நேக்ராஸ், கானோ மற்றும் சுஞ்சி ஆகிய பகுதிகளில் மின்சாரம் இல்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து