முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செக் குடியரசு ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு

சனிக்கிழமை, 8 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

பிராக்,செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் ஆலைகளைத் தொடங்க வேண்டும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார்.மூன்று ஐரோப்பிய நாடுகள் சுற்றுப் பயணத்தின் இறுதிக் கட்டமாக செக் குடியரசு நாட்டுக்குச் சென்றுள்ள ராம்நாத் கோவிந்த், அந்நாட்டு அதிபர் மிலோஸ் சிமானை தலைநகர் பிராகில் சந்தித்துப் பேசினார். அப்போது, பாதுகாப்பு மற்றும் ஆயுதத் தயாரிப்பில் இரு நாடுகளும் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து பேச்சு நடத்தப்பட்டது. இதில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியதாவது:-செக் குடியரசின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஸ்கோடா மோட்டார்ஸ் மற்றும் அதனை கையகப்படுத்தியுள்ள வோக்ஸ்வேகன் நிறுவனமும், இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் ஒரு பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்ய முன்வந்துள்ளன. முக்கியமாக செக் குடியரசை சேர்ந்த ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் ஆலைகள் தொடங்க வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆதரவு அளித்து வரும் செக் குடியரசுக்கு மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து