முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயர் சாதியினருக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு - மத்திய அமைச்சர் பாஸ்வான் வலியுறுத்தல்

புதன்கிழமை, 12 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : அரசு கல்வி நிறுவனம் மற்றும் வேலைவாய்ப்பில் உயர் சாதியினருக்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து, மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறியதாவது:-

எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு எதிரான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கடுமையான சில பிரிவுகளை நீக்கி கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, பழைய அம்சங்களை மீண்டும் புகுத்தும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதனால், மோடி அரசு தலித் மக்களுக்கு எதிரானது என்ற மக்கள் மன நிலை இப்போது மாறி உள்ளது.

அரசின் இந்த முடிவுக்கு எதிரான பிற சமூகத்தினரின் போராட் டம் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில்தான் நடைபெறுகிறது. அரசியல் காரணங்களுக்காகவே இந்தப் போராட்டம் நடைபெறு கிறது.

இதுபோல, அரசு கல்வி நிறுவன மற்றும் வேலைவாய்ப்பில் உயர் சாதியினருக்கும் 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்கலாம். பா.ஜ.க. உயர் சாதியினருக்கு எதிரானது என்ற நிலை எப்போதும் இருந்ததில்லை. அவர்கள்தான் பா.ஜ.க.வின் முதுகெலும்பு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து