முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கக்கடலில் காற்றழுத்தம்: தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்

புதன்கிழமை, 12 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் ஒரு இடங்களில் மழை பெய்தாலும் பல இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பில், கடலோர மாவட்டங்கள், உள் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக வளிமண்டலத்தில் 2 காற்றழுத்த தாழ்வு நிலைகள் நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்தது. சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து