எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : நாட்டின் பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சனிக்கிழமை (செப்.15) அவசர ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பெட்ரோல், டீசல் விலையில் வரலாறு காணாத உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் அணிவகுத்துள்ள நிலையில், பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படும் ஆய்வுக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த இரண்டு பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பதற்கான முக்கிய முடிவுகள் ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மத்திய கொள்கை குழு துணைத் தலைவர் ராஜீவ் குமார், பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் விவேக் தேவ்ராய், நிதித்துறை செயலாளர் ஹஸ்முக் அதியா உள்ளிட்டோர் இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரலாற்றிலேயே இதுவரையிலும் இல்லாத அளவுக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு புதன்கிழமை காலையில் ரூ.72.91 காசுகளாக வீழ்ச்சி அடைந்தது. இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்ததைவிட ரூபாயின் மதிப்பில் 12.3 சதவீதம் அளவுக்கு ஏற்பட்ட சரிவாகும்.
எனினும், புதன்கிழமை மாலை நேர நிலவரப்படி, ரூபாயின் மதிப்பில் 51 காசுகள் உயர்ந்து ரூ.72.18-ஆக இருந்தது. ரூபாயின் மதிப்பு மேலும் சரிவதை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் உறுதி அளித்துள்ளது.
நாட்டின் நிதிப்பற்றாக்குறையை கட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கில், வளர்ச்சித் திட்டங்களுக்கான செலவினங்களை மத்திய அரசு குறைக்கக் கூடும் என்றும், வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்க கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீழ்ச்சியின் பாதிப்புகள்: ரூபாய் மதிப்பின் சரிவு காரணமாக நாட்டின், அந்நிய செலாவணி பரிமாற்றம் தொடர்புடைய நடப்புக் கணக்கு பற்றாக்குறை மேலும் அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதிக்கான செலவினமும் அதிகரித்துள்ளது. காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றுக்கான நுகர்வோர் விலை விகிதம் கடந்த மாதம் 3.69 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. இது கடந்த 10 மாதங்களில் இல்லாத வீழ்ச்சியாகும். இந்த விலை விகிதம் கடந்த அக்டோபர் மாதம் 3.58 சதவீதமாக இருந்தது.
எல்லாவற்றையும்விட, கச்சா எண்ணெய் இறக்குமதி செலவும் அதிகரித்துள்ளதால், பெட்ரோல், டீசலின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால், மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இதேபோல், நாடெங்கிலும் பொதுமக்களிடமும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து அதிருப்தி நிலவுகிறது. முழுஅடைப்புப் போராட்டத்தை நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் நடத்தின.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் வகையில், மத்திய அரசு அதன் மீது விதிக்கும் கலால் வரியை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், வளர்ச்சித் திட்ட செலவினங்களை குறைக்காத நிலையில், மத்திய அரசுக்கான வருவாயை குறைக்கச் செய்யும் வகையில் கலால் வரி குறைப்பை மேற்கொள்ள முடியாது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து வருகிறது.
மத்திய பாஜக அரசின் இந்த முடிவு காரணமாக ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்படலாம் என கருதப்படுகிறது.
அதேசமயம், ஆந்திரம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்துள்ளன. மத்திய அரசும் இதேபோன்று கலால் வரியை ரூ.2 குறைக்கும்பட்சத்தில், ரூ.30,000 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படலாம் என நிதியமைச்சகம் கணக்கிட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச சந்தையில் தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 72 டாலராக உள்ளது. ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக இந்த செலவினம் சற்று கூடுதலாக உள்ளது. இதன் எதிரொலியாகவே, பெட்ரோல், டீசலின் விலை உயர்ந்து வருகிறது.
இந்த விலை உயர்வு செவ்வாய்க்கிழமை உச்சத்தை தொட்டது. நாட்டிலேயே குறைவான கலால் வரி விதிக்கப்படும் தில்லியில் அன்றைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.87-ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.72.97-ஆகவும் இருந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.