முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவுண்டி கிரிக்கெட்: முரளி விஜய் அபார சதம்!

வெள்ளிக்கிழமை, 14 செப்டம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

இங்கிலாந்தில் உள்ள எஸ்ஸெக்ஸ் கவுண்டி அணியில் விளையாட முரளி விஜய் ஒப்பந்தம் ஆனார். இப்போது நடந்து வரும் கவுண்டி சாம்பியன்ஸ் போட்டியில் இந்த அணி பங்கேற்கிறது. எஸ்ஸெக்ஸ் அணியும் நாட்டிங்கம்ஷைர் அணியும் மோதும் போட்டி நான்கு நாள் டெஸ்ட் போட்டி கடந்த 10 ஆம் தேதி தொடங்கியது. இதில் முரளி விஜய் பங்கேற்றார். முதலில் ஆடிய நாட்டிங்கம்ஷைர் அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய எஸ்ஸெக்ஸ் அணி, 233 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.  இதில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய முரளி விஜய், 95 பந்துகளைச் சந்தித்து 9 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நாட்டிங்கம்ஷைர் அணி, 337 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக பிராத்வொ யிட் 68 ரன்கள் சேர்த்தார். எஸ்ஸெக்ஸ் அணியின் சைமன் ஹார்மர் அப்பாரமாக பந்துவீசி 6 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் தனது இரண்டாவ து இன்னிங்ஸை தொடங்கிய எஸ்ஸெக்ஸ் அணி, முரளி விஜய், வெஸ்லி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இரண்டு விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. முரளி விஜய் 100 ரன்னும் வெஸ்லி 110 ரன்னும் எடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து