முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

சனிக்கிழமை, 15 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ஜம்மு,ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் எல்லையோரப் பகுதிகளில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளை ஒழுக்கும் விதமாக அங்கு ராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அங்கு கடந்த சில மாதங்களாக இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் பயங்கரவாதிகள் பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், குல்கம் பகுதியில் அமைந்துள்ள சௌகம் எனுமிடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில் வெள்ளிக்கிழமை இரவு முதல் இருதரப்புக்கும் இடையில் நீடித்து வரும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 5 பயங்கரவாதிகள்  சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் பாராமுல்லா - காஸிங்கட் பகுதிகளுக்கு இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

குல்சர் அஹமது பட்டேர், ஃபைஸல் அஹமது ராதேர், சாஹித் அஹமது மிர், மஸ்ரூர் மோல்வி மற்றும் சாஹூர் அஹமது லோன் ஆகிய இந்த 5 பேரும், ஹிஸ்புல் முஜாஹிதீன் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா ஆகிய பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்று தற்போது தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து