முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த தேர்தலில் எதிர்கட்சி தலைவராக கூட மு.க.ஸ்டாலின் வரமுடியாது அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கடும் பாய்ச்சல்

திங்கட்கிழமை, 17 செப்டம்பர் 2018      மதுரை
Image Unavailable

மதுரை   முதலமைச்சர், துணைமுதலமைச்சர் ஆணைக்கிணங்க மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 110வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது மாவட்ட கழக அவைத்தலைவர் புதூர் துரைப்பாண்டி தலைமை தாங்கினார், செயற்குழு உறுப்பினர் சண்முகவள்ளி, தெற்கு 1ம் பகுதி கழக செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாவட்ட கழக துணைச்செயலாளர் சி.தங்கம், மாவட்ட கழக பொருளாளர் ஜெ.ராஜா, பகுதி கழக செயலாளர்கள் தளபதிமாரியப்பன், பி.எஸ்.கண்ணன், எம்.மகேந்திரன், என்.முருகன், கே.ஜெயவேல், செ.பூமிபாலகன், பைக்காரா கருப்பசாமி, பரவை சி.ராஜா, கறிக்கடை எஸ்.முத்துகிருஷ்ணன், வில்லாபுரம் ரமேஷ்ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.
     மதுரை மாநககர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, தலைமை கழக பேச்சாளர்கள் செல்வக்குமார், சங்கரன் கோவில் எம்.கணபதி, நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.கோபாலகிரு~;ணன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். 
      மற்றும் இக்கூட்டத்திற்கு அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற துணைச்செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், கழக எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் கிரம்மர் சுரேஷ், முன்னாள் துணைமேயர் கு.திரவியம், மற்றும் பெ.சீத்தாராமன், எஸ்.டி.ஜெயபாலன், சோலை எம்.ராஜா, இரா அரவிந்தன், எம்.தமிழ்ச்செல்வன், சக்திமோகன், வி.எஸ்.முத்துராமலிங்கம், பி.ஆர்.சி.ஜெயராஜ், குமுதா, இந்திரா, பெ.இந்திராணி, ஜெ.மாணிக்கம், ஜி.என்.அன்புசெழியன், கலைச்செல்வன், ராணிநல்லுச்சாமி மற்றும் சக்திவிநாயகர் பாண்டியன், ஆர்.பாஸ்கரன், மல்லன், ஏ.வி.எஸ்.பிரிட்டோ, எஸ்.எம்.டி.ரவி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது
        தி.மு.க தலைவர் ஸ்டாலின் தற்போது இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்;டுள்ளதாக ஊடகங்களில் கூறிவருகிறார். தற்பொழுது மக்களாகிய நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும் ஆட்சியிலிருக்கும் போது தினகரன் பத்திரிக்கையை எரித்து அதன் மூலம் 3 உயிர்களை பலியாக்கினார்கள், லீலாவதி என்ற பெண்ணை நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்தார்கள், அது மட்டுமல்லாது சொந்த கட்சி பகையின் காரணமாக தா.கிருஷ்;ணனை நடுரோட்டில் வெட்டி கொலை செய்தார்கள், தற்போது தி.மு.க.ஆட்சியில் இல்லையென்றாலும் கூட தங்களி;ன் ரவுடி செயல்களை இன்னும் குறைக்கவில்லை அதற்கு பல உதாரணங்களை சொல்லலாம் சென்னை விருகம்பாக்கத்தில் ஓசி பிரியரிணி தரவில்லை என்பதற்காக கடையின் முதலாளியை தி.மு.க.வைச்சேர்ந்த கிரமர், சுரேஷ் உள்ளிட்ட நான்கு திமுகவினர் தாக்கினர். அதே போல் திருவண்ணாமலையில் செல்போன் கடை ஊழியரை ரகுபதி என்ற திமுக பிரமுகர் தாக்கியுள்ளார். அதே போல் பெரம்பலூர் பகுதியில் உள்ள அழகுநிலையம் வைத்திருக்கும் சத்யா என்ற பெண்மணியை செல்வக்குமார் என்ற திமுக பிரமுகர் தாக்கியுள்ளார். இந்த தாக்கிய நபர்களை கைது செய்தது சிறையிலடைத்தது தவறு என்று அவர் கூறுகிறாரா.
            அதே போல் உதிரிகட்சி ஆரம்பித்திருக்கும் டி.டி.வி.தினகரன் எங்களிடம் தான் கட்சி உள்ளது என்று வாய்க்கு வந்தபடி உளறிவருகிறார். இன்று தமிழகம் முழுவதும், அண்ணா பிறந்தநாள் விழாவை கொண்டாடி வருகிறோம், ஒவ்வொரு மாவட்டத்திலும் இது போன்ற மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்து வருகிறது, ஆனால் டி.டி.வி.தினகரன் போடும் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் 200 வண்டிவீதம் மொத்தம் 6400 வண்டிகள் என கணக்கெடுத்து ஒரு வண்டிக்கு 10 நபர் வீதம் 500ரூபாய் சம்பளம் கொடுத்து ஏறத்தாழ 50,000 ஆட்களை திரட்டி கூட்டம் நடத்துவது சாதனையா அது சாதனை கிடையாது அது விளம்பரம், அதே போல் டி.டி.வி.தினகரன் தான் உத்தமன் போல் பேசி வருகிறார். காபிசோ சட்டத்தில் ஒரு வருடம் சிறையில் இருந்தவர் தான் இந்த தினகரன் அது மட்டுமல்லாது அந்நிய செலாவணி வழக்கில் இவர் குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டு ரூ.28 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது தற்போது நீதிமன்ற கண்டிசன் பெயிலில் தான் உள்ளார்.
    ஆர்.கே.நகர் டோக்கன் சிஸ்டம் போல் திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெறுவேன் என்று கொக்கரிக்கிறார். ஆர்.கே.நகர் போன்று, திருப்பரங்குன்றம் கிடையாது திருப்பரங்குன்றம் கழகத்தின் கோட்டையாகும், அதனால் தான் 9 முறை கழகம் இங்கு வென்றுள்ளது இங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் கூட 43,000 வாக்கு வித்தியாசத்தில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றுள்ளார்.
     தற்போது மின்சாரத்தை பற்றி ஸ்டாலினும், டி.டி.வி.தினகரனும் பேசி வருகின்றனர். தமிழகம் முழுவதும் 2 கோடி மின் பயனீட்டாளர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது, இதில் ஸ்டாலின், டி.டி.வி.தினகரன் கூட பயன்பெறுகின்றனர், அது மட்டுமல்லாது 250 யூனிட் இலவச மின்சாரத்தின் மூலம் 1.20லட்சம் கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறுகின்றனர். அதே போல் 750யூனிட் இலவச மின்சாரத்தின் மூலம் 1.45 லட்சம் விசைத்தறி நெசவாளர்கள் பயன்பெறுகின்றனர். கடந்த தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் மின்வெட்டை உருவாக்கிய ஸ்டாலினுக்கு மின்சாரத்தை பற்றி பேச எந்த தகுதியும் கிடையாது  இவ்வாறு அவர் பேசினார்    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து