முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் 14 வீரர்களுடன் சென்ற ரஷ்ய போர் விமானம் மாயம்

செவ்வாய்க்கிழமை, 18 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

மாஸ்கோ,சிரியாவில் 14 வீரர்களுடன் புறப்பட்ட ரஷ்ய போர் விமானம் மத்திய தரைக்கடல் பகுதியில் ரேடார் தொடர்பை இழந்ததால், அது சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் அரசுப் படைகளுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது. கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதிகளில் அவ்வப்போது விமான தாக்குதலும் நடத்தி வருகிறது. இந்த பதட்டமான  சூழ்நிலையில், சிரியா எல்லையில் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரஷ்ய போர் விமானம் ஒன்று சிரியாவின் ஹிமியம் விமானப்படை தளத்திற்கு திரும்பியது.

சிரியா கடற்கரையில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் உள்ள மத்திய தரைக்கடல் பகுதியில் வந்த போது திடீரென அந்த விமானத்தின் ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்ததை அடுத்து, விமானம் என்ன ஆனது, அதில் பயணம் செய்த 14 வீரர்களின் நிலை என்ன? என்பது தெரியவில்லை. விமானத்தை தேடும் பணியை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.

சிரியாவின் லடாக்கியா மாகாணத்தில் உள்ள ராணுவ நிலைகளை குறி வைத்து இஸ்ரேல் நாட்டின் விமானங்கள் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த வேளையில் ரஷ்ய ஜெட் விமானம் ரேடார் தொடர்பு துண்டிக்கப்படிருப்பதால், விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து