முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிர்மலா சீதாராமனுக்கு வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது

செவ்வாய்க்கிழமை, 18 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

டேராடூன்,மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வாட்ஸ்அப்பில் கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் அதிரடியாக உத்தரகாண்ட் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி உத்தரகாண்ட் மாநிலம் பிதோராகார் மாவட்டத்திலுள்ள தார்சுலா நகரில் ராணுவம் சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். ஆனால் இந்நிகழ்ச்சிக்கு நிர்மலா சீதாராமன் வருவதை முன்கூட்டியே அறிந்த ஒருவர், தனது வாட்ஸ் அப் குரூப்பில் ஒரு தகவலை பதிவிட்டார்.

அப்போது நேரம் இரவு 9.30. அந்த தகவலில், நான் நிர்மலா சீதாராமனை துப்பாக்கியால் சுடப் போகிறேன். நாளையே அவரது கடைசி நாள் என்று சொல்லி இருந்தார். குரூப்பில் இந்த தகவலை அவர் பதிவிட்டதும், அதற்கு இன்னொருவர் வந்து வாட்ஸ்அப்பில் சர்ச்சையான பதிலை பதிவிட்டார்.இப்படி இருவரும் மாறி மாறி தகவல்களை பரிமாறிக் கொண்டனர். ஆனால் இந்த தகவல் உளவுத்துறையினருக்கு தெரிந்து விட்டது. உடனடியாக இந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் உத்தரகாண்ட் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், இரண்டு பேருமே மெசேஜ் அனுப்பிய ராத்திரி நேரத்தில் செம போதையில இருந்ததாக தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து