முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல சுப்ரீம் கோர்ட் அனுமதி

செவ்வாய்க்கிழமை, 18 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.ப.சிதம்பரம் மத்திய மந்திரியாக இருந்த போது, ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்கு அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் 35 நாள் பயணமாக வெளிநாடு செல்ல கார்த்தி சிதம்பரம் அனுமதி கோரியுள்ளார். அவரது இந்த பயணம் நவம்பர் மாதம் இறுதியில் தான் முடியும் என்பதால் ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்படும். இந்நிலையில் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கின் விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை. அவர் வெளிநாடு செல்ல இனிமேல் அனுமதிக்கக் கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமது மகளை கல்வி நிறுவனத்தில் சேர்க்க வெளிநாடு செல்ல வேண்டும் என கார்த்தி சிதம்பரம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி அளித்துள்ளது. செப்டம்பர் 20-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து