முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

12 நகரங்களில் 90 ரூபாயை கடந்தது பெட்ரோல் விலை

செவ்வாய்க்கிழமை, 18 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable


சென்னை,சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக பெட்ரோல், டீசல் விலைகள் நாள்தோறும் உயர்ந்து வருகிறது. ஆனால் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்காக நடவடிக்கை எடுக்க மத்திய அரசு மறுத்து விட்டது. 4 மாநிலங்கள் மட்டுமே பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்துள்ளன.

இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை நேற்றும் உயர்ந்தது. பெட்ரோல் விலை லிட்டருக்கு  நேற்று 10 காசுகள் அதிகரித்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 85.41-க்கு விற்றது. சென்னையில் சில நிறுவனங்களின் விற்பனை நிலையங்களில் பெட்ரோல் விலை ரூ. 86- ஐ நெருங்கி உள்ளது. டீசல் விலை 10 காசுகள் அதிகரித்து  லிட்டருக்கு ரூ. 78.10 ஆக விற்பனையானது.

பெட்ரோல் விலை மீது மராட்டியத்தில் தான் அதிக வரி விதிக்கப்படுகிறது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத், ரத்னகிரி, பீட், லாத்தூர், பர்பனி, ஹங்கோலி, நந்தூர்பார், நாண்டெட், ஜால்னா, ஜல்காவ், கோண்டியா, புல்தானா ஆகிய 12 நகரங்களில் பெட்ரோல் விலை 90 ரூபாயை கடந்துள்ளது. நான்டெட் மாவட்டத்தில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 93 ரூபாயை நெருங்கி விட்டது. சென்னையில் கடந்த ஜனவரி மாதம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 69.20 ஆக இருந்தது. கடந்த 2 மாதங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 17 ரூபாய் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து