முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்சூரன்ஸ் பாதுகாப்பு திறந்த வெளி கருத்தரங்கம்

செவ்வாய்க்கிழமை, 18 செப்டம்பர் 2018      திண்டுக்கல்
Image Unavailable

வத்தலக்குண்டு - வத்தலக்குண்டில் பொதுத்துறை இன்சூரன்ஸ் பாதுகாப்பு திறந்த வெளி கருத்தரங்கம் வத்தலக்குண்டு காப்பீட்டு கழகம் ஊழியர் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்;டம் வத்தலக்குண்டில் காளியம்மன் கோவில் அருகில் வத்தலக்குண்டு காப்பீட்டு கழகம் ஊழியர் சங்கத்தின் சார்பில் பொதுத்துறை இன்சூரன்ஸ் பாதுகாப்பு திறந்த வெளி கருத்தரங்கம் நடைபெற்றது. கிளை செயலாளர் ரமேஷ்பாண்டியன் தலைமை வகித்தார். கிளை தலைவர் முருகன் வரவேற்றார். கிpளை தலைவர் துரைராஜ், ஜான்கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர், திண்டுக்கல் மண்டல துணை பொதுச் செயலாளர் கணேசன், கிளை மேலாளர் வழிவிட்டன், வளர்ச்சி அதிகாரி ராமச்சந்திரன், கிளை செயலாளர் பரமசிவம், கோபால், மதுரை கோட்ட சங்க தலைவர் பிச்சைக்கண்ணு, திண்டுக்கல் மாவட்ட துணை செயலாளர் ரகுபதி, நிலக்கோட்டை வட்ட கிளை தலைவர் முருகேசன், மதுரை கோட்ட துணை தலைவர் வாஞ்சுநாதன், மாவட்ட தலைவர் கௌதமன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். கூட்;டத்தில் எல்ஐசி பிரிமியம் மீதான ஜிஎஸ்;டி வரியினை ரத்து செய்ய வேண்டும், பொதுத்துறை ஜிஐஎன் பங்குகளை விற்க கூடாது, பொதுத்துறை இன்சூரன்ஸ் பாதுகாப்பு பிரச்சார இயக்கத்தின் சார்பாக மேற்கண்ட கருத்துக்களை முன்வைத்து திறந்த வெளி கருத்தரங்கள் நடைபெற்றது, கூட்டத்தின் முடிவில் வத்தலக்குண்டு கிளை பொறுப்பாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து