முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

17 ஆண்டுகள் கழித்து 4 அடி கூந்தலை வெட்டிய பெண்

புதன்கிழமை, 19 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புனே : சடை போல இருந்த நீண்ட கூந்தலை வெட்டினால் தெய்வ குற்றமாகி  விடும் என்று அண்டை வீட்டார்கள் சொன்னதால் பயந்து போன கலாவதி என்ற பெண்மணி அதை அப்படியே வெட்டாமல் விட்டு விட்டார். தற்போது 17 வருடங்கள் கழித்து இவரது  4 அடி நீளக் கூந்தலை மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு அமைப்பினர் வெட்டி விட்டு அவரது மூட நம்பிக்கையையும் போக்கியுள்ளனர்.  

50 வயது இல்லத்தரசியான கலாவதி பர்தேசி என்ற பெண்மணி, கடந்த 17 வருடங்களாக சடை போல இருந்த தனது கூந்தலை வெட்டாமல் இருந்திருக்கிறார். ஆனால் இது தெய்வ குற்றமாகி விடும் என அண்டை வீட்டார்கள் கூறியதை கேட்டு பயந்து போனாராம். 

இது குறித்து அவர் கூறுகையில், சடை முடியை வெட்டிவிடலாமென்று முடிவு செய்தேன். பக்கத்தில் இருந்த சலூனுக்குச் சென்று முடியை வெட்டி விடச் சொன்னேன். ஆனால் அவர்கள் சடை முடியை வெட்ட ரூ. 60 ஆயிரம் கேட்டார்கள். அவ்வளவு பெரிய தொகையை என்னால் கொடுக்க முடியாததால் முடியை அப்படியே விட்டு விட்டேன். இந்நிலையில் மகாராஷ்டிர அந்தாஷ்ரதா நிர்மூலன் சமிதி அமைப்பினர் என்னுடைய சடை முடியை வெட்டியதோடு நிற்காமல் என்னுடைய பயத்தையும் மூடநம்பிக்கையையும் போக்கி விட்டார்கள் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து