முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர், காவல்துறையை அவதூறாக பேசிய கருணாஸ் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு

வியாழக்கிழமை, 20 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய கருணாஸ், முதல்வரையும், காவல்துறையையும் அவதூறாக பேசிய விவகாரத்தில் அவர் மீது 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வைரலான பேச்சு....நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கடந்த 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசினார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாகவும்,  காவல்துறை அதிகாரி ஒருவருக்கு சவால் விடுக்கும் தொணியிலும் கருணாஸ் பேசினார். மேலும் ஜாதி ரீதியாகவும் பல்வேறு சர்ச்சை கருத்துக்களை கருணாஸ் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வழக்குப் பதிவு....இதனையடுத்து, கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். யூ டுயூப்பில் வெளியான வீடியோவை ஆதாரமாக கொண்டு 6 பிரிவுகளின் கீழ் கருணாஸ் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து