முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை

வியாழக்கிழமை, 20 செப்டம்பர் 2018      விருதுநகர்
Image Unavailable

 விருதநகர் -தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விருதுநகர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் 30 சதவீத சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர்  . அ.சிவஞானம்,  குத்துவிளக்கேற்றி  துவக்கி வைத்து தெரிவித்ததாவது :-
  தமிழக அரசு எதிர்வரும் தீபாவளிபண்டிகையை முன்னிட்டு பட்டு, பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது.
நமது விருதுநகர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளித் திருநாள் பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்களின் மனதைக் கவரும் வகையில் பல வித வடிவமைப்புகளில் பருத்தி, பட்டு சேலைகள், வெண்பட்டு சேலைகள், தற்போது உடல்நலத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்ப ரசாயன உரங்கள் இல்லாமல் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஆர்கானிக் புடவைகள், கண்டாங்கி சேலைகள், செட்டிநாடு சேலைகள், கைத்தறி சுங்கடிச் சேலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், நவீன காலத்திற்கு உகந்த ஜீன்ஸ், டாப்ஸ், குர்தா வேட்டி, சுடிதார் மற்றும் நவீன யுக ஆடவர்களை கவரும் விதமாக லினன் ஃ காட்டன் சட்டைகள்  விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு கடன் விற்பனை வசதி உண்டு. தீபாவளி பண்டிகை வரை அனைத்து விடுமுறை நாட்களிலும் விற்பனை உண்டு. மேலும் மின் வணிக வலைத்தளமான www.cooptex.com என்ற இணையதளத்திலும்  கோ-ஆப்டெக்ஸ் சரக்குகளை பெற்று கொள்ளலாம்;.
  கோ-ஆப்டெக்ஸில் வாங்கும் ஒவ்வொரு ஜவுளி ரகமும் கிறாமப்புறங்களில் உள்ள ஏழை கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திடும். எனவே பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் ஆடைகள் வாங்கி அணிந்து மகிழ்ந்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம்,  தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மேலாளர்(அரசுதிட்டம்)  .பழனிச்சாமி, மேலாளர் (வடிவமைப்பு மற்றும் உற்பத்தி)  .செல்வராஜ், மேலாளர் (பொறுப்பு)  .சந்தனமாரி, அரசு அலுவலர்கள் உட்பட விருதுநகர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து