முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 1 ஏற்றம்.

வியாழக்கிழமை, 20 செப்டம்பர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்- வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.இதனால் ஆந்திரா மாநிலம் களிங்கன்பட்டி கடலோரப்பகுதியில் கிழக்கு,தென்கிழக்கு திசையில் ஆழ்கடலில் 530 கி.மீ வேகத்திலும், அதுபோல ஒடிசா மாநிலம் பூரி கடலோரப்பகுதியில் கிழக்கு,தென்கிழக்கு திசையில் ஆழ்கடலில் 440 கி.மீ வேகத்திலும் காற்று வீசி வருவதையொட்டி இந்த கடலோரப்பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது.இதனால் இந்த மண்டலம் புயலாக  மாறவாய்ப்புள்ளது.ஆதலால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாம்பன் கடலோரப்பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 1 ஏற்றப்பட்டுள்ளது.மேலும் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என மீன் துறை அதிகாரிகள்  எச்சரித்துள்ளனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து