முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

வெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

பந்திபூரா,ஜம்மு-காஷ்மீர் பந்திபூராவில் எல்லைப் பகுதியில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பந்திபூராவில் எல்லைப் பகுதியின் சுக்பாபா எனும் இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மற்ற ஒருவரையும் பிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கையில் பாதுகாப்பு படையின் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் குறித்த அடையாளங்கள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து