முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சேலம், வேலூர், மதுரை சிறைகளில் கைதிகள் விடுதலை

வெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சேலம்,எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சேலம், வேலூர், மதுரை சிறைகளில் இருந்து கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சேலம் மத்திய சிறையில் இருந்து 31 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்த கைதிகள் நன்னடத்தை அடிப்படையில், சேலம் மத்திய சிறையில் இருந்து இதுவரை 2 கட்டமாக 22 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

இதே போன்று வேலூர் மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச்சிறையில் இருந்து 3 பெண்கள் உட்பட 32 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். ஏற்கனவே, 63 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.மதுரை மத்திய சிறையில் இருந்து இதுவரை 8 கட்டங்களாக கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று 9-வது கட்டமாக 3 பெண்கள் உட்பட 16 பேர் பொதுமன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்டனர். மதுரை மத்திய சிறையில் இருந்து விடுதலையான 16 பேரையும் உறவினர்கள் கண்ணீர் மல்க கட்டி அணைத்து வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து