முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேதர்ஜாதாவை, ஆல்-ரவுண்டராக பயன்படுத்த வேண்டும்: கவாஸ்கர்

வெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை,இந்திய அணியின் பகுதி நேர பந்து வீச்சாளரான கேதர் ஜாதவை ஆல்-ரவுண்டராக பயன்படுத்த வேண்டும் என முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் கேதர் ஜாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார். அவரை முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பாராட்டி உள்ளார்.

அவர் கூறியதாவது:-கேதர் ஜாதவ் ஆல்-ரவுண்டராக திகழ்வதை செய்து காட்டினார். அவரது பந்துவீச்சை எதிரணியினர் கணிக்க சிரமப்படுகின்றன. அவர் தனது பங்களிப்பை சிறப்பாக அளித்து வருகிறார். முதன்மை பந்து வீச்சாளர்கள் சிரமப்படும் போது கேப்டனுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக கேதர் ஜாதவ் உள்ளார். அவரை ஆல்-ரவுண்டராக பயன்படுத்த வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து