முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புரட்டாசி சனி: திருப்பதியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் தள்ளுமுள்ளுவால் சிலருக்கு மூச்சுத்திணறல்

சனிக்கிழமை, 22 செப்டம்பர் 2018      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை,புரட்டாசி சனிக்கிழமையை ஒட்டி திருமலை, திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக தள்ளுமுள்ளு ஏற்பட்டு சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் தங்க வைக்கப்படும் 31 அறைகளும் நிரம்பி மூன்று கிலோமீட்டருக்கு மேல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதன் காரணமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டு தள்ளுமுள்ளு காரணமாக பெண்கள் உட்பட சில பக்தர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடன் வந்த பக்தர்கள், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

மொகரம் விடுமுறை, புரட்டாசி முதல் சனி, ஞாயிற்றுக்கிழமை என அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதால் திருமலையில் கடுமையான பக்தர்கள் கூட்டம் நிலவியது. அதேநேரம் வி.ஐ.பி. பாஸ்கள் இந்த மூன்று நாட்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து