முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தற்கொலைக்கு முயன்றதாக நடிகை நிலானி மீது வழக்கு

சனிக்கிழமை, 22 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,நடிகை நிலானி பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றது குறித்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.தூத்துக்குடி சம்பவம் குறித்து சர்ச்சை வீடியோ வெளியிட்டு பிரபலமானவர் நிலானி. இவர் காந்தி லலித்குமார் என்பவரை திருமணம் செய்துகொள்ளவும் இருந்தார். இந்நிலையில் லலித்குமாருக்குப் பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அறிந்து நிலானி விலகினார்.

இதனால் மனம் உடைந்த லலித்குமார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். மதுரவாயல் அஷ்டலட்சுமி நகரில் உள்ள வீட்டில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில்  தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக நிலானி மீது மதுரவாயல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து