முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலாண்டு தேர்வு நிறைவு: வரும் 3-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறப்பு

சனிக்கிழமை, 22 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,தமிழக பள்ளிகளில் காலாண்டு தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்றதை தொடர்ந்து அக்டோபர் 2-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் கடந்த 10 -ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தன. மொஹரம் பண்டிகை என்பதால் வெள்ளிக்கிழமை பள்ளிகளுக்கு அரசு விடுமுறை நாளாகும். இதன் காரணமாக நேற்று பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டது. நேற்றைய தினம் 1-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் முடிவடைந்தன. இதையடுத்து இன்று முதல் வரும்  2 -ம் தேதி வரை பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 3 -ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து