முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களின் நலனுக்காகவே அமைதி பாதையில் செல்கிறோம்: பாகிஸ்தான்

ஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்,நாங்கள் போருக்கு தயாராக இருக்கிறோம், ஆனால், மக்களின் நலனுக்காக அமைதிப் பாதையில் செல்கிறோம் என்று பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத் கூறுகையில், பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக நடவடிக்கை அவசியம். இதற்கு முன் பல ஆபரேஷன்களை பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தி வெற்றி பெற்றுள்ளோம். ஆனால், பாகிஸ்தான் ராணுவம் போன்று காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.

இதற்குப் பதில் அளித்து பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் ஆசிப் கபூர் அந்தநாட்டுச் செய்தி சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-நாங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமைதிக்காக தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடி வருகிறோம். ஏராளமான உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளோம். எங்களுக்கும் அமைதியின் விலை என்ன என்பது தெரியும். நாங்கள் ஒருபோதும் வீரர்களை மரியாதைக் குறைவாக நடத்தியது இல்லை. இதற்கு முன் இதுபோல் இந்திய வீரர்கள் கழுத்தறுத்து கொல்லப்பட்ட போது எங்களைத்தான் இந்திய ராணுவம் குற்றம் சுமத்தியது. நாங்கள் முறையான, நேர்மையான ராணுவத்தினர், இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டோம்.

நாங்கள் போருக்கு தயாராக இருக்கிறோம். ஆனால், மக்களின் நலனுக்காகவும், அண்டைநாடுகளின் நலனைக் கருத்தில் கொண்டு அமைதிப்பாதையில் செல்கிறோம். நாங்கள் கடந்த மே மாதம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் அமல்படுத்தினோம். அதைத் தொடர்ந்து இந்திய ராணுவம் பின்பற்றி இருந்தால், அடுத்த கட்டத்துக்கு சென்று இருக்கும். இவ்வாறு கபூர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து