முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல்லில் காவலர்கள் மற்றும் குடும்பத்தினருக்கான மருத்துவ முகாம்

ஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - திண்டுக்கல் ஆயுதப்படை மண்டபத்தில் காவலர்கள் மறவ்றும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. சக்திவேல் உத்தரவின் பேரில் மாவட்ட காவல்துறை, ராக்போர்ட் லயன்ஸ் கிளப் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை இணைந்து ஆயுதப்படை மைதானத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. ஜோஷி நிர்மல்குமார் முகாமை தொடங்கி வைத்தார். அப்பல்லோ மருத்துவமனை பி.ஆர்.ஓ. பழனிவேல்ராஜன், லயன்ஸ் கிளப் ஹரீஷ், சாமிநாதன், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. நடராஜமூர்த்தி ஆகியோர் முன்நின்று ஏற்பாடு செய்து நடத்தி வைத்தனர்.
இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள், ஓய்வு பெற்ற காவலர்கள், ஆயுதப்படை மற்றும் தாலுகா, அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் காவல் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்கள் என சுமார் 450 பேர் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து