முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. தலைவர்னா அவ்வளவு லேசா?எஸ்.வி சேகருக்கு தமிழிசை கேள்வி

திங்கட்கிழமை, 24 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,நடிகர் எஸ்.வி.சேகர் நாடகத்தில் பேசுவதாக நினைத்து பேசி இருப்பதாக தமிழிசை விமர்சனம் செய்துள்ளார். ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் எஸ்.வி.சேகர் வழிபாடு நடத்தினார். பின்னர் அவரிடம் செய்தியாளர்கள், தமிழக பா.ஜ.க. தலைமையை நீங்கள் ஏற்கவில்லை என்ற கருத்து உள்ளதால் செயற்குழுவுக்கு உங்களை அழைக்கவில்லை என்கிறார்களே என்ற கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த எஸ்.வி.சேகர், பா.ஜ.க. தலைமையை ஏற்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக ஏற்றுக் கொண்டு இப்போது உள்ள வாக்கு வங்கியை விட அதிக வாக்கு வங்கியை என்னால் உருவாக்க முடியும் என்று தெரிவித்தார். செய்தியாளர்கள் மீண்டும் அழுத்தமாக பா.ஜ.க. தலைமையை நீங்கள் மதிக்காமல் இருப்பது போன்ற தோற்றம் உள்ளதே என கேட்டனர்.பின்னர், அப்படி கேட்டீர்களா? என்று கூறிய அவர், அழைத்தால் தான் போக முடியும். அதற்காக தினமும் தமிழிசை வீட்டு முன் நின்று அக்கா நான் வந்துட்டேன்னு சொல்லட்டுமா? அவங்க எனக்கு வயசுல சின்னவங்க. அப்படியே சொல்லணும் என்றால் தங்கச்சி என்றுதான் கூற வேண்டும் என்று தெரிவித்தார். எஸ்.வி. சேகரின் இந்த பேச்சு கட்சிக்குள்ளேயே குழப்பத்தை ஏற்படுத்தியது.

எஸ்.வி.சேகரின் இந்த பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் தமிழிசை கூறியதாவது:- எஸ்.வி.சேகர் பல சிரிப்பு நாடகத்துல நடிச்சு நடிச்சு, நாடகம்னு நினைச்சு பேசிட்டார் போல, பா.ஜ.க. தலைவர்னா அவ்வளவு லேசான விஷயமாக நினைத்து விட்டார் அவர் என்று பதில் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து