முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரையான் என்று சொல்வதா? பா.ஜ. தலைவர் அமித்ஷாவுக்கு வங்கதேசம் கடும் கண்டனம்

திங்கட்கிழமை, 24 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

டாக்கா,இந்தியாவில் வசிக்கும் சட்டவிரோத குடியேறிகளை கரையான் என்று பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா வர்ணித்துள்ளார். இதற்கு வங்கதேச தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஹசனுல் ஹக் இனு கண்டனம் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்திலிருந்து இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கரையான்கள் என விமர்சித்துள்ளார் அமித் ஷா. ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு வெளியேற்றுவோம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார். வங்கதேச அமைச்சர் ஹசனுல், அமித் ஷாவின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஹசனுல் கூறுகையில், தேவையில்லாமல் கருத்து கூறியுள்ளார் அமித்ஷா. இது முறையற்றது. இந்தியாவில் எந்த வங்கதேசத்தவரும் குடியிருக்கவில்லை. வங்கமொழி பேசுவோர் எல்லோருமே வங்கதேசத்தவர் என கருதக் கூடாது. அவரது பேச்சுக்கு நாங்கள் முக்கியத்துவம் தர விரும்பவில்லை. இது இந்திய அரசின் அதிகாரப்பூர்வ கருத்து இல்லை என்று நாங்கள் நம்புகிறோம்.

உண்மை நிலை என்ன என்பதை அமித் ஷாவுக்கு அவரது கட்சி எடுத்துக் கூறினால் நல்லது. இந்திய வங்கதேச உறவு குறித்துப் பேச அமித்ஷாவுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. இந்த விவகாரத்தை இந்திய அரசிடம் நாங்கள் கொண்டு செல்லப் போவதில்லை என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து