எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல்,- கொள்ளை அடித்த பணத்தை வைத்து பதவியை பிடித்து விடலாம் என தினகரன் நினைக்கிறார். பணம் இருப்பவர்கள் எல்லாம் பதவியில் அமர முடியாது மக்களுக்காக உழைப்பவர்கள் மட்டுமே பதவிக்கு வர முடியும் என தினகரனுக்கு சாட்டையடி கொடுத்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.
திண்டு;க்கல் மாவட்ட அ.இ.அ.தி.மு.கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா 110வது பிறந்தநாள் விழா மற்றும் இலங்கை தமிழர்களுக்கு தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் துரோகம் இழைக்கப்பட்டதைக் கண்டித்தும் ஒட்டன்சத்திரத்தில் மாவட்ட கழக செயலாளரும் திண்டுக்கல் மாநகராட்சி முதல் மேயருமான வி.மருதராஜ் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய கழக செயலாளரும் முன்னாள் வாரியத் தலைவருமான பி.பாலசுப்பிரமணி அனைவரையும் வரவேற்றார். நகர கழக செயலாளர் உதயம் ஏ.ராமசாமி. தொப்பம்பட்டி ஒன்றிய கழக செயலாளர் கிட்டுச்சாமி முன்னிலை வகித்தனர். கழக அமைப்பு செயலாளரும் வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன், கழக அமைப்பு செயலாளரும் மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி, கழக அமைப்பு செயலாளரும் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான இரா.விசுவநாதன், கழக செய்தி தொடர்பாளரும் கலை இலக்கிய பிரிவு தலைவருமான லியாகத் அலிகான், மாவட்ட கழக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.உதயகுமார். வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.பி பரமசிவம், தலைமைக் கழக பேச்சாளர்கள் எம்.கோபி காளிதாஸ், நடிகர்
ஏ.கே.ராஜேந்திரன். என். முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் பேசினர்.
கழக அமைப்பு செயலாளரும் வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் சிறப்புரையாற்றுகையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் நம்மை ஆளாக்கிய புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை மாநிலம் முழுவதும் நடத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன் நாகர்கோவிலில் நடைபெற்றது. வருகிற 30ம் தேதி கடைசியாக சென்னையில் விழா எடுக்கிறார்கள். புரட்சி தலைவரின் புகழை முதல்வரும், துணை முதல்வரும் பரப்பி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் தானும் கூட்டம் நடத்துகிறேன் என தினகரன் மேலூரில் கூட்டம் நடத்தினார். அதற்கு பிறகு ஏதாவது கூட்டம் நடத்துவார் என்று பார்த்தால் மன்னார்குடியில் கூட்டம் நடத்தினார். அதில் தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும். அதுபோல் 50 ஆயிரம் அடி தாண்டுவேன், 60 ஆயிரம் அடி தாண்டுவேன் என தன்னைத் தானே உயர்த்தி பேசி உள்ளார். 2001ல் நான் நினைத்திருந்தால் தமிழ்நாட்டுக்கு முதல் அமைச்சராக ஆகி இருப்பேன் எனவும் கூறி உள்ளார். எனது வீட்டில் டிரைவர் உள்ளார். வேலை ஆட்கள் உள்ளனர். பல நண்பர்கள் உள்ளனர். அத்தனை பேரும் எனது சொத்துக்கோ அல்லது எனது உடமைக்கோ உரிமை கோரினால் எவ்வளவு கேவலமோ அதைவிட கேவலமாக அங்கே பாதுகாப்புக்காக அல்லது வேறு உதவிகளுக்காக சென்ற அந்த குடும்பத்தை சேர்ந்த தினகரன் இன்று எங்களுக்கு ஆட்சி அமைக்க உரிமை இருக்கிறது முதல் அமைச்சர் பதவியை நாங்கள் ஏற்றிருப்போம். நாங்களாகவே விட்டுக் கொடுத்துள்ளோம். என்று பேசி உள்ளார். இது கேப்பையிலே நெய் வடிகிறது என்றால் அதை கேட்பவர்களுக்கு எங்கே போனது எங்கே போனது புத்தி?
மாநிலம் முழுவதும் வாகனத்தை ஏற்பாடு செய்து கொடுத்து ஆட்களை திரட்டி தினகரன் ஒட்டன்சத்திரத்தில் பொதுக்கூட்டம் நடத்தினார். ஆனால் இன்று கழகம் ஏற்பாடு செய்துள்ள பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து மட்டுமே தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். இங்குள்ள வணிக பெருமக்கள், தாய்மார்கள் இன்று நடைபெறுகின்ற கூட்டம் எழுச்சி போல அவர்கள் கூட்டத்தில் இருந்ததா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
ஜெயிலுக்கு போனேன் ஜெயிலுக்கு போனேன் என்று நடிகர் வடிவேலு போல கூறி வருகிறார். எதற்காக நீங்கள் ஜெயிலுக்கு போனீர்கள்? காபிபோசா சட்டத்தில் கைது செய்து சிறை சென்ற குற்றவாளி தானே தினகரன். ஆனால் அவர் மகாத்மா காந்தியின் உத்தம பேரன் போல் கழக ஆட்சியில் ஊழல் நடந்துள்ளதாக கூறி வருகிறார். அன்றைய தினம் லண்டன் வழக்கில் கருணாநிதியிடம் பிச்சை எடுத்து அவரை மட்டும் விடுவித்து அம்மாவை பொய் வழக்கில் காட்டி கொடுத்த துரோகி தான் தினகரன். அவரை நம்பி சென்ற நமது நண்பர்கள் மீண்டும் நமது கழகத்தில் இணைய வேண்டும்.
அம்மாவை கொலை செய்தவர்கள் தான் இன்று ஆட்சியை கைப்பற்ற துடிக்கின்றனர். தினகரன். திவாகரன். பாஸ்கரன் என அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் தாங்கள் கொள்ளை அடித்த பணத்தை வைத்து பதவியை பிடித்து விடலாம் என நினைக்கின்றனர். பணம் இருப்பவர்கள் தான் முதல் அமைச்சராக, பிரதமராக, ஜனாதிபதியாக வர முடியும் என்றால் டி.வி.எஸ் ஐயங்கார். டாடா பிர்லா, அம்பானி ஆகியோர் தான் பதவியில் இருந்திருக்க வேண்டும். பணம் இருப்பவர்களால் மட்டுமே பதவிக்கு வந்து விட முடியாது. மக்களுக்காக உழைப்பவர்கள் மட்டுமே பதவிக்கு வர முடியும். அவ்வாறு உழைத்ததால் தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் 3 முறையும். அம்மா 6 முறையும் முதல்வராக பதவி வகித்தனர். 37 எம்.பிக்களையும் அம்மா பெற்று தந்தார்.
வரவிருக்கின்ற திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் மறைந்த போஸ் 43 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் தற்போது 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கழகம் வெற்றி பெறும். திருவாரூரிலும் கழகமே மகத்தான வெற்றி பெறும். இவ்வெற்றிக்கு பிறகு தினகரன் கட்சியில் உள்ள தம்பிமார்கள் நமது கழகத்தில் வந்து இணைய வேண்டும். புரட்சி தலைவி அம்மாவின் கனவை நிறைவேற்றுவோம்.
மு.க.ஸ்டாலின் நமது ஆட்சியில் ஊழல் நடந்து வருவதாக ஊடகங்களில் கூறி வருகிறார். நமது அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும் அவருக்கு தெளிவாக பதில் அளித்துள்ளனர். வழக்கு போடுங்கள். அதனை சட்டரீதியாக எதிர்கொண்டு வெற்று பெறுவோம். நாங்கள் குற்றவாளி என்றால் பதவியை ராஜினாமா செய்ய தயார் என ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளனர். 2016ம் ஆண்டில் ஸ்டாலின் பேண்ட் சர்ட் போட்டு பிரச்சாரம் செய்தார். ஆனால் அம்மா தான் மகத்தான வெற்றியை பெற்றார். கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் கொடுக்க வில்லை என குற்றம் சாட்டி வருகின்றனர். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாளை மெரீனாவில் அடக்கம் செய்வதற்கு அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் கேட்ட போது அவர் முன்னாள் முதல்வர்களுக்கு இடம் கிடையாது என கூறியதை ஸ்டாலினிடம் தெரிவித்தோம்.மெரீனாவில் அடக்கம் செய்வது தொடர்பாக வழக்கும் உள்ளது. எனவும் தெரிவித்தோம். ஒரே நாளில் அவர்கள் போட்ட வழக்கை வாபஸ் பெற வைத்தவர்கள் தான் நம்முடைய முதல்வரும். துணை முதல்வரும். அ.தி.மு.கழகத்தை அழிக்க பார்த்த கருணாநிதியாலேயே முடியவில்லை. அவரது மகன் ஸ்டாலினால் தானா முடியப் போகிறது.?
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மிக சிறப்பான முறையில் ஆட்சி புரிந்து வருகின்றனர். காவிரி உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் அம்மாவின் வழியில் கையாண்டு மகத்தான வெற்றியை பெற்று தந்துள்ளனர். கழகத்தையோ ஆட்சியையோ எந்த கொம்பனாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது. அம்மா வழியில் நடைபெறும் கழக ஆட்சிக்கு தமிழக மக்கள் என்றென்றும் துணை நிற்க வேண்டும் என்று பேசினார்.
கூட்டத்தில் நத்தம் தொகுதி முன்னாள் செயலாளர் கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் குப்புசாமி, ஏ.டி.செல்லசாமி, கே.எஸ்.என்.வேணுகோபாலு, தென்னம்பட்டி பழனிசாமி, பிரேம்குமார். சுப்புரத்தினம், ஒன்றிய கழக செயலாளர்கள் ஆத்தூர் பி.கே.டி நடராஜன், ரெட்டியார்சத்திரம் ராஜ்மோகன், நத்தம் ஷாஜகான். சாணார்பட்டி ராமராசு, பழனி முத்துசாமி, குஜிலியம்பாறை மலர்வண்ணன், வடமதுரை லட்சுமணன், நிலக்கோட்டை யாகப்பன், வத்தலக்குண்டு பாண்டியன். திண்டுக்கல் ஜெயசீலன், கொடைக்கானல் மேல்மலை முருகன், நகர செயலாளர்கள் கொடைக்கானல் ஸ்ரீதர். பழனி முருகானந்தம், சார்பு அணி நிர்வாகிகள் திவான்பாட்சா, பாரதிமுருகன், ஜெயபாலன், வி.டி.ராஜன், வளர்மதி, அன்வர்தீன், ஜெயராமன், அகரம் பேரூர் கழக செயலாளர் சக்திவேல். வத்தலக்குண்டு பீர் முகமது உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.