முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காதலியை கொன்ற கென்யா கவர்னர்:டி.என்.ஏ பரிசோதனையில் சிக்கினார்

செவ்வாய்க்கிழமை, 25 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

நைரோபி,7 மாதம் கர்ப்பமாக இருந்த காதலியை கொன்ற குற்றத்திற்காக கென்யாவை சேர்ந்த மாகாண கவர்னர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், கூறப்பட்டதாவது...கென்யாவின் மிகோரி மாகாணத்தின் கவர்னர் ஒகோத் ஒபாடா  தனது காதலியை கொலைச் செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டிருக்கிறார்.26 வயது மாணவியான ஷாரோன் இம்மாத தொடக்கத்தில் காட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நடந்தப்பட்ட விசாரணையில் ஏழு மாதம் கர்பிணியாக இருந்த ஷாரோனை கொலை செய்த வழக்கில் அவரது காதலரும், மிகோரி மாகாணத்தின் கவர்னருமான ஒகோத் மீது போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது.

முதற்கட்ட விசாரணையில் ஹாரோனுக்கு தனக்கு உள்ள தொடர்பை மறுத்த ஓகோத் பின்னர் அதனை ஒப்புக் கொண்டிருக்கிறார். மேலும் டி.என்.ஏ சோதனையில் ஷாரோனின் வயிற்றிலுள்ள சிசுவின் டி.என்.ஏவும், ஓகோத்தின் டி.என்.ஏ.வும் ஒத்து போகியுள்ளது. மேலும் ஷாரோன் கொல்லப்படுவதற்கு முன் பலாத்காரம் செய்யப்பட்டு கொலைச் செய்யபட்டிருக்கிறார் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டத்தை தொடர்ந்து ஒகோத்தை உடனடியாக போலீஸார் கைது செய்தனர்.

ஹாரோன் கர்ப்பமானதில், ஒகோத்துக்கு விருப்பம் இல்லை என்றும் இதன் காரணமாக இந்தக் கொலை நடத்தப்பட்டிருப்பதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்தக் கொலையில் ஒகோத்துக்கு உதவி புரிந்த அவரது இரண்டு பாதுகாவலர்கள், இரண்டு உள்ளூர் அதிகாரிகள், ஒரு ஒட்டுநர் என அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து