முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதிக்கு முக்கிய பிரமுகர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வரவேண்டும்: வெங்கையா நாயுடு அறிவுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 25 செப்டம்பர் 2018      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி,முக்கிய பிரமுகர்கள் யாராக இருந்தாலும் திருப்பதி கோயிலுக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வரவேண்டும் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது பதவி ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து நேற்று  காலை குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் வெங்கய்யா நாயுடு செய்தியாளர்களிடம் பேசுகையில், துணை ஜனாதிபதி  பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதால் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய வந்ததாகக் கூறினார். பக்தர்களுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சாமி தரிசனத்திற்கு திருப்பதிக்கு வர வேண்டும் என்று கூறினார்.இதன் மூலம் மற்ற பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் எனவும்  அவர் தெரிவித்தார்.

தமிழக முதல்வருடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, தமிழக முதல்வருடனான சந்திப்பின்போது எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. இருவரும் சாமி தரிசனத்திற்காக வந்தோம் என வெங்கய்யா நாயுடு கூறினார்.கடந்த மே மாதம் குடும்பத்தினருடன் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்த முதல்வர் பழனிசாமி, நடப்பாண்டில் இரண்டாவது முறையாக நேற்று குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து