முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இமாச்சல், பஞ்சாபில் கனமழை நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 25 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

சிம்லா, இமாச்சல் பிரதேசம் மற்றும் பஞ்சாபில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பலியாகிவிட்டனர்.

இமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்த மாநிலத்தின் சுற்றுலாத் தலமான குலுவில் ஓடும் பியாஸ் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, காஷ்மீர், டெல்லி, உத்தராகண்ட் மாநிலங்களில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இமாச்சல பிரதேசத்தின் சிர்மார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 3.7 ஆகப் பதிவானது. இதனால் உயிரிழப்போ, பொருள் இழப்போ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

இமாச்சல பிரதேசம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. காங்ரா மாவட்டத் தில் வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். சுற்றுலாத் தலமான குலு, மணாலியில் நிலச்சரிவுகள் காரணமாக சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற் றுலா பயணிகள் அங்கு சிக்கி யுள்ளனர். மணாலியில் பியாஸ் நதி வெள் ளத்தில் ஒரு வாகனம் அடித்துச் செல்லப்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இதேபோல மணி காரன் பகுதியில் ஒரு வாகனம் வெள் ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதில் இருந்த 2 பேர் உயிரிழந்தனர் . குலுவில் ஒரு சிறுமி வெள் ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு பலியானாள். ஒட்டுமொத்தமாக மாநிலம் முழு வதும் 10 பேர் பலியாகி உள்ளனர். பலரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்கிறது.

கடந்த 23 ஆண்டுகளில் இல்லாத வகையில் இமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. மீட் புப் பணியில் விமானப் படை ஈடு பட்டுள்ளது. இதுகுறித்து விமானி ஒருவர் கூறியபோது, மாநிலம் முழு வதும் கடந்த 2 நாட்களில் மட்டும் 21 பேரை ஹெலிகாப்டர் மூலம் மீட்டுள்ளோம். தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறோம்” என்று தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கை காரணமாக இமாச்சல பிரதேசத்தின் பெரும் பாலான மாவட்டங்களில் பள்ளி களுக்கு விடுமுறை அளிக்கப்பட் டுள்ளது. மழை மட்டுமன்றி ரோட் டாங், கெய்லாங், கோக்சார் உள் ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3 அடி உயரத்துக்கு பனி படர்ந்துள்ளது.

இதேபோல பஞ்சாப், ஹரியாணா, டெல்லி, உத்தராகண்ட் மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. உஷார் நிலையில் இருக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வாகத்துக்கும் அந்தந்த மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.

கனமழை காரணமாக பஞ்சாபின் அனைத்து அணைகளும் வேக மாக நிரம்பி வருகின்றன. அதன் நீர்மட்டம் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது. பஞ்சா பில் ராணுவம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கதுவாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். அந்தப் பகுதியில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 29 பேர் மீட்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து