முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரசின் நோக்கத்தை காப்பாற்றிய சுப்ரீம் கோர்ட்டிற்கு நன்றி: ராகுல்

புதன்கிழமை, 26 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ஆதார் கார்டை, மக்களுக்கான சக்தியாக கருதி அமல்படுத்தியது காங்கிரஸ். ஆனால் அதை கண்காணிப்பு சாதனமாக மாற்றப் பார்த்தது பா.ஜ.க. அரசு. காங்கிரசின் நோக்கமே சரி என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்து விட்டது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ஆதார் எண் தொடர்பான முக்கியத் தீர்ப்பை நேற்று சுப்ரீம் கோர்ட் வெளியிட்டது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து இரு விதமான கருத்துக்கள் நிலவி வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வரவேற்றுள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

காங்கிரசை பொறுத்தவரை ஆதார் கார்டு என்பது ஒவ்வொரு இந்தியரையும் வலுப்படுத்தும் சாதனமாகும். பா.ஜ.க.வைப் பொறுத்தவரை அதை மக்களை கண்காணிக்கவும், ஒடுக்கவும் பயன்படுத்த முனைந்தது. காங்கிரசின் நோக்கமே சரியானது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் மூலம் தெளிவுபடுத்தி விட்டது. காங்கிரசின் நோக்கத்தை காப்பாற்றியமைக்காக சுப்ரீம் கோர்ட்டிற்கு நன்றி என்று அதில் தெரிவித்துள்ளார் ராகுல்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து