முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒவ்வொரு ராணுவ வீரரின் மரணமும் மனவேதனையை ஏற்படுத்துகிறது: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் வருத்தம்

புதன்கிழமை, 26 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

லக்னோ  : ஒவ்வொரு ராணுவ வீரரின் மரணச் செய்தியும் தனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருத்தம் தெரிவித்தார்.

லக்னோவில் பா.ஜ.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

ராணுவ வீரர்கள் நம் நாட்டின் பெருமைக்குரியவர்கள். ஒவ்வொரு முறை ராணுவ வீரர்கள் கொல்லப்படும்போதும் எனக்கு மிகுந்த மனவேதனை ஏற்படுத்துகிறது. எனது வேதனை உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு முறை இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்படும் போதும் இரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை. மிகவும் வருத்தமாக உள்ளது என்றார்.

முன்னதாக, செப். 18-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் ராம்கார் எல்லைப் பகுதியில் நடைபெற்ற திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது காணாமல் போன எல்லைப் பாதுகாப்புப் படை வீரரின் உடல் முழுவதும் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இதேபோன்று நரேந்திர சிங் என்ற எல்லைப் பாதுகாப்புப் படை வீரரும் கடந்த மாதம் பயங்கரவாதிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து